Total Pageviews

Tuesday, December 20, 2011

இன்ஸ்பெக்டர் அங்கிள்?

கோவை செல்லும் தனியார் சொகுசு பேருந்தில் மனைவியை அனுப்பிவைத்துவிட்டு நான் ஆபீஸ் போன அரை மணி நேரத்தில் மனைவியிடமிருந்து மிஸ்ட் கால். 

உடனடியாக என் மொபையிலிருந்து தொடர்பு கொண்டேன். ''ஹலோ இன்ஸ்பெக்டர் அங்கிளா ? நல்லாயிருக்கீங்களா அங்கிள்? எங்கேயிருந்து பேசறீங்க? சேலத்துலயிருந்தா? சேலத்துல என்ன பார்க்க வர்ரீங்களா, வாங்க அங்கிள் பஸ் சேலம்கிட்டே வரும்போது உங்களுக்கு கால் பண்றேன் தாங்ஸ் அங்கிள், மாமிய கேட்டதாச் சொல்லுங்க!'' என்று பேசி இணைப்பை துண்டித்தாள் என் மனைவி. 

எனக்கு எதுவும் புரியவில்லை . மறுபடி அவள் கோவை போய் சேர்ந்தபின் ராத்திரி ஒன்பது மணிக்கு போன் செய்தாள். '' என்னங்க பஸ்ஸுல எனக்கு பின் ஸீட்டுல உட்கார்ந்திருந்தவன் சரியில்லை, 

ஜாடை மாடையா பேசுறதும், டீஸ் பண்றதுமா இருந்தான் அதான் அப்படி பேசினேன் அதுக்கப்புறம் அவன் கப்சிப்னு ஆயிட்டான் நானும் தொந்தரவு இல்லாம நிம்மதியா வீடு வந்து சேர்ந்தேன். அவளது சாதுர்யம் கண்டு அசந்து போனேன்

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...