Total Pageviews

Thursday, December 29, 2011

மீசை முருகேசன்




முருகேசனுக்கு வயது நாற்பது கடந்தபோது தலையிலிருந்த முடிகளும் தொலைந்து முன்பக்க வழுக்கையில்தான் முதலில் வெளிச்சம் விழத் தொடங்கியது.வழுக்கை முருகேசன் என்ற பட்டப் பெயர் அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவருக்குத் தெரியாமலேயே அவருக்கு போடப்பட்டிருந்தது. 
 
வழுக்கை முருகேசன் இன்னும் வரல...! அலுவலக பியூன் சக ஊழியரிடம் சொல்வதைக் கேட்டுக் கொண்டுவந்த முருகேசனுக்கு மூடு அவுட் ஆக, தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து ஒட்டிக்கெக்ள அன்றிரவு தனது மனக்கவலையை தனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டார் முருகேன்.
 
என்னங்க, உங்களுக்கு தலையுலதான் வழுக்கை. மீசை பலமா இருக்கு. பேசாம அசல் அஜீத் மீசை மாதிரி வளர்த்துக்குங்க. பார்க்குற யாருக்கும் முதல்ல உங்க மீசைதான் தெரியும். அப்புறம் பாருங்க உங்கள எல்லோரும் மீசை முருகேசன்னு கூப்பிடப்போறாங்க.
 
 இல்லாத ஒண்ணுக்காக வருத்தப்படுறதைவிட இருக்குற ஒண்ணவெச்சு சந்தோஷப்படலாமில்லையா?"தனது மனைவியின் தன்னம்பிக்கை வார்த்தைகளில் கட்டுண்டு மீசை வளர்க்க ஆரம்பித்தார் முருகேசன்

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...