Total Pageviews

Tuesday, December 20, 2011

இத முதல்லயே சொல்லியிருக்கக்கூடாதா!''

மருத்துவமனையின் பி.ஆர்.ஓ யார் என வரவேற்பறையில் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரைப் பார்க்கச்சென்றான் செந்தில். 

`` மேடம்... பி.ஆர்.ஓ கயல்விழிங்கிறது...'' `` நாந்தான், என்ன விஷயம்?''

 `` உங்கள பார்த்துட்டு போலாமுன்னுதான் வந்தேன்!'' தயங்கியபடியே சொன்னான் செந்தில். `` பார்த்துட்டு போறதுக்கு நான் என்ன பார்க்கா... இல்ல சினிமாவா?'' எரிச்சலாகக் கேட்டாள் கயல்விழி. `` உங்ககூட கொஞ்சம் தனியாப் பேசணும்!'' ``

என்ன?'' முறைத்தாள் கயல்விழி. `` நான் சிகரெட் பிடிக்கமாட்டேன், டிரிங்ஸ் வாரத்துல ஒருநாள், லேடீஸ் சகவாசம் சுத்தமா கிடையாது!'' `` யோவ், வெளியே போய்யா, வாட்ச்மேன்....'' உரக்க சத்தமிட்டாள் கயல்விழி. 

``என்னப்பத்தி சொன்னா எதுக்கு வெரட்டறீங்க?'' பரிதாபத்துடன் கேட்டான் செந்தில். `` 

அதுக்கு எனக்கென்ன அவசியம்!'' மீண்டும் எரிந்து விழுந்தாள். 

 `` நேத்து என் அம்மா அப்பா உங்க வீட்டுக்கு வந்து சம்பந்தம் பேசி, நீயும் ஒரு தடவ பொண்ண பார்த்துட்டு வான்னு சொன்னாங்க, அதான் வந்தேன்!'' 

சட்டென கய்ல்விழியின் முகத்தில் வெட்கம் அமர `` இத முதல்லயே சொல்லியிருக்கக்கூடாதா!'' என்று நெளிய ஆரம்பித்தாள் செந்திலுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...