Total Pageviews

Thursday, December 29, 2011

தாயாரோடு வாழ்வதே பாக்யம்



அந்த முதியோர் இல்லத்தின் தோட்டத்தில் நட்டிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த வரலட்சுமி அம்மாவின் அருகில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் கதிரேஷன்.அம்மா,

 இங்க நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? இங்க உங்களுக்கு எல்லா சவுகரியங்களும் இருக்கா? தாழ்மையான குரலில் கேட்ட கதிரேசனை உடைந்த பார்வையால் ஏறிட்டாள் வரலட்சுமி.

இங்க சவுகரியத்துக்கு ஒரு குறையும் இல்ல, என் மகனுக்கு வெளி நாட்டுல வேல கிடைச்சதுன்னு என்ன இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டான்,

என் கடைசி காலத்துல என் மகன் கூட இருந்து அவனோட அன்பையும் பாசத்தையும் அனுபவிக்குற பாக்யம் கிடைக்கலேங்கற சின்ன வருத்தம் மனசுக்குள்ள இருக்கத்தான் செய்யுது!" தனது அடி மனதில் படிந்து கிடந்த வருத்தத்தை கதிரேசனிடம் பகிர்ந்து கொண்ட போது வரலட்சுமியின் கண்கள் லேசாய் கலங்கியிருந்தன

.கதிரேசன் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். வெளிநாட்டிற்க்குச் சென்று வேலை பார்க்க தனக்கு கிடைத்த வாய்ப்பையும், தனது தாயாரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது என்ற முடிவையும் நிராகரித்துவிட்டு தனது தாயாரோடு வாழ்வதே பாக்யம் என்ற எண்ணத்தோடு வீட்டுக்கு நடந்தான் கதிரேசன்

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...