Total Pageviews

Monday, March 9, 2020

ஸ்மார்ட்போன்!




ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதைக் கேள்!” என்றது.

“என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே அவருக்கு முக்கியமா இருக்கக் கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் தூங்கும் போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துல தான் முழிக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர், நான் இல்லாம எங்கேயும் போகக் கூடாது.”

“அப்புறம்..?”

“எம்மேல ஒரு கீறல் பட்டாலும் அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சுபோயிடணும்.”

“அப்புறம்..?”

“அவ்வளவுதான்.”

பூதம், அந்தப் பெண்ணை ஸ்மார்ட்போனாக மாற்றியது!

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...