Total Pageviews

Thursday, December 29, 2011

நல்லெண்ணம் - சமுதாய அக்கறை

பெங்களூருக்கு வந்து சேர்ந்த தனியார் பேருந்திலிருந்து தனது மனைவி குழந்தகளுடன் இறங்கினான் மகேஷ். அவனைச்சுற்றி ஆட்டோ டிரைவர்கள் ஈ மாதிரி மொய்த்தார்கள்0.

 ஜே.சி ரோடு போகணும் எவ்வளவு?"முப்பத்தஞ்சு ரூபா ஆகும் 

சார்!"இருபத்தஞ்சு ரூபா குடுக்கிறேன் வர்றீங்களா?"என்ன சார் நீங்க... பார்க்கிறதுக்கு டீசண்டா இருக்கீங்க, பத்து ருபாய்க்கு பேரம் பேசறீங்களே!"இருபத்தஞ்சு ரூபாய்க்கு வர்றதா இருந்தா வா, இல்லையின்னா வேற ஆட்டோ புடிச்சுக்கறேன்!" தீர்மானமாகச் சொன்ன மகேஷை ஏளனமாகப் பார்த்தான் டிரைவர். என்ன்ங்க....டி கம்பெனியில மாசம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறீங்க,  

பத்து ரூபாய் தானே அதிகம் கேக்கறான் குடுத்துடவேண்டியதுதானே!" யதார்த்தமாய் கேட்டாள் மகேஷின் மனைவி.  குடுத்துடலாம்... ஆனா, வசதி வாய்ப்பு இல்லாதவங்க்கிட்டயும் ஆட்டோகாரங்க இதையே கேட்பாங்க, அவங்களால இதுமாதிரி குடுக்க முடியுமா?" தனது கணவனின் கேள்வியில் புதைந்திருந்த சமுதாய அக்கறையை நினைத்து ஒரு கணம் ஆச்சரியமானாள் அவனது மனைவி

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...