Total Pageviews

Thursday, December 29, 2011

நல்லெண்ணம் - சமுதாய அக்கறை

பெங்களூருக்கு வந்து சேர்ந்த தனியார் பேருந்திலிருந்து தனது மனைவி குழந்தகளுடன் இறங்கினான் மகேஷ். அவனைச்சுற்றி ஆட்டோ டிரைவர்கள் ஈ மாதிரி மொய்த்தார்கள்0.

 ஜே.சி ரோடு போகணும் எவ்வளவு?"முப்பத்தஞ்சு ரூபா ஆகும் 

சார்!"இருபத்தஞ்சு ரூபா குடுக்கிறேன் வர்றீங்களா?"என்ன சார் நீங்க... பார்க்கிறதுக்கு டீசண்டா இருக்கீங்க, பத்து ருபாய்க்கு பேரம் பேசறீங்களே!"இருபத்தஞ்சு ரூபாய்க்கு வர்றதா இருந்தா வா, இல்லையின்னா வேற ஆட்டோ புடிச்சுக்கறேன்!" தீர்மானமாகச் சொன்ன மகேஷை ஏளனமாகப் பார்த்தான் டிரைவர். என்ன்ங்க....டி கம்பெனியில மாசம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறீங்க,  

பத்து ரூபாய் தானே அதிகம் கேக்கறான் குடுத்துடவேண்டியதுதானே!" யதார்த்தமாய் கேட்டாள் மகேஷின் மனைவி.  குடுத்துடலாம்... ஆனா, வசதி வாய்ப்பு இல்லாதவங்க்கிட்டயும் ஆட்டோகாரங்க இதையே கேட்பாங்க, அவங்களால இதுமாதிரி குடுக்க முடியுமா?" தனது கணவனின் கேள்வியில் புதைந்திருந்த சமுதாய அக்கறையை நினைத்து ஒரு கணம் ஆச்சரியமானாள் அவனது மனைவி

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...