Total Pageviews

Thursday, December 29, 2011

அவசரம்



``ஹலோ, உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா?'' தனது கைபேசியில் வந்த குறுஞ்செய்தியைப்பார்த்து யாராகயிருக்கும் என குழம்பிப்போனாள் ஐஸ்வர்யா.
 
``பேசறது அப்பறம் இருக்கட்டும் முதல்ல நீ யாரு!'' தனது கைபேசியிலிருந்து குறுஞ்செய்தி ஒன்றை தட்டி விட்டாள் ஐஸ்வர்யா.
 
`` என் பேரு இளமாறன் சென்னையில ஒரு ஐ.டி கம்பெனியுல வேல பார்க்கிறேன்!'' பதிலுக்கு அவனும் தட்டி விட்டான்.
 
``முதல்ல என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது!'' ஐஸ்வர்யா மீண்டும் குறுஞ்செய்தி ஒன்றை தட்டிவிட்டாள்.
 
`` அத அப்பறம் சொல்றேன், முதல்ல உன்கூட பேசறதுக்கு அனுமதி குடு!'' குறுஞ்செய்தியைப்பார்த்ததும் ஐஸ்வர்யா கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்.
 
``நீ என்னடா பேசறது நானேபேசறேன்!'' அவனது எண்ணுக்கு டயல் செய்தாள் ஐஸ்வர்யா.
 
`` பொண்ணுங்க நம்பர எப்பிடியாவது கண்டுபிடிக்கிறது, கண்ட கண்ட மெசேஜ் அனுப்பறது, அப்பறம் ஐ லவ் யூ ன்னு சொல்றது, இப்பிடி எத்தன பேர்டா கிளம்பியிருக்கீங்க!'' கோபத்தில் வெடித்தாள் ஐஸ்வர்யா.
 
``ஹலோ, நான் ஒண்ணும் அந்த மாதிரி ஆள் கிடையாது உனக்கு ஒரு அட்வைஸ் சொல்றதுக்குத்தான் உன்கூட பேசலாமான்னு அனுமதி கேட்டேன், பிரவுசிங் சென்டருக்கு போன நீ, உன் பயோ டேட்டாவ டைப்பண்ணி அத டெலிட் பண்ணாம வந்துட்ட, வேற யாராவது அத ஓப்பன் பண்ணி படிச்சிருந்தா உன் போன்நம்பர குறிச்சுட்டு இப்போ நீ சொன்னியே மெசேஜ் அனுப்பறது பேசறது அப்பறம் ஐ ல்வ் யூன்னு சொல்றது இதெல்லாம்தான் நடந்திருக்கும், இனியாவது கவனமா இரு!'' சொல்லிவிட்டு போனை கட் செய்தான் இளமாறன்.
 
`` சாரி!'' என்று குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு அவனது பதிலுக்கு காத்திருந்தாள் ஐஸ்வர்யா

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...