Total Pageviews

61,244

Thursday, December 29, 2011

தங்கச்சி பாப்பா



வணிகவியல் மூன்றாமாண்டு படிக்கும் சரவணன் தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சாக்லெட் வழங்கிக்கொண்டிருந்தான். எனக்கு தங்கச்சி பாப்பா புறந்திருக்கு!'' சந்தோசமாகச் சொன்னான் சரவணன்.  
 
குமாரும் கேசவனும் அதிர்ந்து சிலையானார்கள். உனக்கும் உன் தங்கச்சிக்கும் இருபது வருஷ இடைவெளி இருக்கு, வயசான உன் அப்பா அம்மாவுக்கு இந்த வயசுல ஒரு குழந்தை தேவையா? இத எப்பிடிடா சந்தோஷமா ஏத்துகிட்டு எங்களுக்கெல்லாம் சாட்லெட் குடுக்கிற!''  
 
ஒளிவு மறைவின்றி நேரடியாகவே கேட்டான் குமார். 
 
சரவணன் கோபப்படாமல் மெல்லிய புன்னகையை நழுவவிட்டுச் சொன்னான்.என் அம்மா அப்பாவ குழந்தை பெத்துக்கச்சொல்லி வற்புறுத்தினதே நான்தான். ரெண்டு வருஷத்துக்கு முன்னால பிளஸ் டூ படிச்சுகிட்டு இருந்த என் தங்கச்சி ஒரு பையன காதலிச்சிருக்கா, படிக்குற வயசுல காதலான்னு அப்பா திட்டியிருக்காரு, அந்த வருத்தத்துல என் தங்கச்சி தூக்கு மாட்டி செத்துப்போயிட்டா.  
 
இப்போ செத்துப்போன என் தங்கச்சியே மறுபடியும் பொறந்து வந்தது மாதிரி இருக்கு!'' கண்ணீரைத் துடைத்தபடிச் சொன்ன சரவணனை 'சாரிடா' என்று கட்டி அணைத்தார்கள் குமாரும் கேசவனும்
 

No comments:

Post a Comment

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...