Total Pageviews
Tuesday, December 20, 2011
ரொம்ப பிடிச்ச விஷயம்
சாயங்கால வேளையில் தனது தோழி அம்பிகாவைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றாள் அனு. பூட்டிய வீட்டுக்குள் அவளது கணவன் காட்டு கத்தலாய் கத்திக்கொண்டிருந்தார். அழைப்பு மணியை அடிப்பதா வேண்டாமா என தயங்கி பின்பு அடித்தாள்.
கதவை திறந்து வெளியே பார்த்த அவளது கணவர் '' வாங்க என்று அழைத்துவிட்டு வெளியேறிப்போனார். அம்பிகாவின் முகத்தில் எந்த வித வருத்தமுமின்றி இயல்பாகவே இருந்தாள்.
''என்னடி உன் புருஷன் இந்த திட்டு திட்டுறாரு கேட்டுகிட்டு சும்மா நிக்கற!'' அனு ஆதங்கத்துடன் கேட்டாள்.
`` எப்பவுமே அவர் சட்டப்பாட்கெட்டுலயிருந்து செலவுக்கு பணத்த எடுத்துட்டு சொல்லிடுவேன், இண்ணைக்கு சொல்ல மறந்துட்டேன், பாவம் அவர் பாக்கெட்டுல பணமிருக்குன்னு நெனச்சு பிரண்ட்ஸ்சோட ஹோட்டலுக்கு போய் ஏமார்ந்துட்டாராம்!'' தனது கணவரைப்பற்றி ஆதரவாகப்பேசிய அவளை ஆச்சரியமாகப்பார்த்தாள்.
`` அதுக்காக இப்பிடியா கண்டபடி திட்டுறது, உனக்கு வருத்தமே இல்லையா?
'' நான் எதுக்கு வருத்தப்படணூம், அவர்தான் ரொம்ப வருத்தப்படுவாரு, என்ன அதிகமா திட்டியிட்டேன்னு வர்றப்போ மல்லிகைப்பூவோட வந்து என்ன சமாதானப்படுத்துவார், எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயமே அதுதான் என்றபோது அனு அசந்துபோனாள்
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"
தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...
-
ச னிக்கிழமைதோறும் தனது தாய் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடிக்கும் தனது மனைவி ஆனந்தியை கோபத்தில் முறைத்தான் தீபக் . வாரம்தோறும் ...
-
மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?! அப்பா கேட்கும் போது இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா என்றேன்!.. நீ கவலைப்படாதே! இந்த வரனை ஒப்புக்கோ! உ...
-
என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த '#முதியோர்இல்லம்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!...

No comments:
Post a Comment