Total Pageviews

Tuesday, July 10, 2018

பொறுப்பு !



திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் தனது மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் போகச் சொன்னார் ஜனார்த்தனன்.

“ஏங்க… எல்லார் வீட்டுலயும் மருமக தலையணை மந்திரம் ஓதி சட்டுன்னு தனிக்குடித்தனம் போயிடுவாங்க, நம்ம மருமக நல்ல தங்கமானவ, அவங்க ரெண்டு பேரையும் நீங்க எதுக்கு தனிக்குடித்தனம் போகச் சொல்றீங்க…?” புரியாமல் கேட்டாள் அவரது மனைவி.

“நம்ம மகன் கல்யாணத்துக்கு முன்னால வேலைக்குப் போயிட்டு ஃபிரண்ட்ஸோட சுத்திக்கிட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு வருவான்.

இப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இப்பவாவது நேரத்துல வீட்டுக்கு வருவான்னு பார்த்தா, அவன் பழயது போல லேட்டாத்தான் வர்றான், காரணம் வீட்டுல நாம ரெண்டு பேரும் இருக்கோம்ங்கற தைரியம்.

ரெண்டு பேரையும் தனிக்குடித்தனம் ஆக்கிவிட்டா வீட்டுல மனைவி தனியா இருப்பாளே, சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணுங்கிற பொறுப்பு அவனுக்கு வந்துடும். 

அதனாலதான் அப்படிச் சொன்னேன் !” என்ற கணவரைப் பெருமையாகப் பார்த்தாள் மனைவி.

No comments:

Post a Comment

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...