Total Pageviews

Tuesday, July 10, 2018

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் !



எப்போதும் மகிழ்ச்சியாகத் துள்ளி விளையாடும் தன் மகள் அபிராமி, சோர்வாக அமர்ந்துள்ளதைக் கண்டு வியந்த அவள் அமமா, "ஏண்டா செல்லம்? என்னாச்சு என் அபிக்குட்டிக்கு?'

"உண்மை பேசினா தப்பா மம்மி?' என்றாள் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மகள் அபி.

"ஏன்? பள்ளியில் என்ன நடந்தது?' என வினவினாள் அவள்.

மகள் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியுற்றவள், பள்ளி முதல்வரைச் சந்திக்க முடிவு செய்தாள்.

மறுநாள் காலை...

"எஸ்.. வாட்ஸ் யுவர் பிராப்ளம்?' பள்ளி முதல்வர்.

முதல்நாள் வகுப்பில் நடந்ததைக் கூறத் தொடங்கினாள் அபியின் அம்மா.

"நமது சுதந்திர தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? என என் மகளிடம் டீச்சர் கேட்டிருக்காங்க.'

"ஸோ வாட்?' என்றார் முதல்வர்.

"ஆகஸ்ட் - 14 என அவள் கூறியதும் டீச்சர் அவளைக் கடிந்து கொண்டதுடன் அடித்துள்ளார்' என்றாள் அபி அம்மா.

சட்டென தவறை உணர்ந்த முதல்வர் "ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி மேடம்! இந்த வருடம் முதல் எங்கள் பள்ளியில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களை முதல் நாளே கொண்டாடும் பழக்கத்தை நிறுத்தி விடுகிறோம். அதற்குரிய நாட்களில் மட்டுமே கொண்டாடுவோம்' என உறுதியளித்தார்.

கோபத்துடன் சென்றவள், முதல்வரின் பதிலால் புன்னகையுடன் வெளியே வந்தாள்.

- ச. தமிழ்மாறன்

No comments:

Post a Comment

பெற்ற தாயை பெண்டாட்டிக்காக விட்டுத் தருபவன் ஆம்பளையே இல்லை.

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த '#முதியோர்இல்லம்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!...