Total Pageviews

Tuesday, November 22, 2011

திடம்

 

மூணாவதும் பெண்ணா? கள்ளிப்பால் கொடுக்கற குருவம்மாவுக்கு சொல்லி விட்ர  வேண்டியது தான்."
டவுன்    ஆஸ்பத்திரியில்  பிறந்த    குழந்தையை    வந்து   பார்த்து  விட்டு மாமியார்க்காரி சொல்லிவிட்டுப் போனது செல்லம்மாவின் காதுகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது .

பாவி கட்டின புருஷனும் இல்லே இதுக்கு தலையாட்டறான்.

நினைக்க  நினைக்க  ஆத்திரம்   பொங்கியது     அவளுக்குள் .
டிஸ்சார்ஜ் ஆகி புருஷனுடன் கிராமத்துக்கு திரும்ப பஸ் ஸ்டாண்டில் நின்றபோது...

ஒரு கடையின் ஓரத்திலிருந்த வண்ண மீன்கள் கண்ணாடித் தொட்டியை கவனித்தாள்.

தன்          குட்டிகளுக்கு    பின்னால்     வாயைத்   திறந்து      கொண்டே நீந்திக்கொண்டிருந்தது அந்த ஜிலேபி கெண்டை மீன். கெளுத்தி மீன் ஒன்று குட்டிகளை விழுங்க வர, என்ன ஆச்சரியம்! அத்தனை குட்டிகளும் தாயின் வாய்க்குள் புகுந்து கொள்ள டப்பென்று வாயை மூடிவிட்டு ஆபத்து நீங்கியதும் வாயைத் திறக்க குட்டிகள் வெளியேறி மீண்டும் நீந்தத் தொடங்கின.

" சே! ஐந்தறிவுள்ள மீனே தன் குட்டிகளை காப்பாத்திக்க வழிகளை தெரிஞ்சு வச்சிருக்கச்சே ஆறறிவுள்ள தன்னால் குழந்தைகளை காப்பாத்த முடியாதா ?"

புருஷனிடம் சொன்னாள் உறுதியாக. "யோவ் இந்தக் குழந்தையை கொல்லாம வச்சுக் காப்பாத்துவேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தாத்தான் உன்னோட பஸ்ல வருவேன். இல்லாட்டி என் ஊருக்கு போய்க்கிறேன். ஊர்ல இருக்கற மத்த ரெண்டு பொட்டப் புள்ளைங்களையும் கூட என்னிடமே கொண்டு வந்து விட்டுடு. எப்பாடு பட்டாவது காப்பாதிக்கறேன்.

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...