Total Pageviews

Tuesday, November 22, 2011

இந்திரா மறுபக்கம்

" இந்திரா நீ இன்னும் ரெடியாகலியா? நேரம் ஆயிட்டிருக்கு சீக்கிரம் கிளம்பு, கோயில்ல எல்லோரும் காத்துக்கிட்டிருக்காங்க. உன்னை அழைச்சுக்கிட்டுப் போகத்தான் வந்தேன்"... அவசரப்படுத்தினான் மகேஷ்.

கோயிலில் அலங்காரம் முடிந்து கல்யாணப் பெண்ணாக மாறியிருந்த இந்திரா சுவாமி சன்னதியின் எதிரே மணமகனுடன் நின்ற போது தரிசனத்துக்காக வந்திருந்த அனைவரின் கண்களும் இருவரையும் மொய்த்தன. இந்திராவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

இருவரும் மாலை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்வதை 'மறுபக்கம்' சீரியலுக்காக பல கோணங்களில் பதிவு செய்தார் வீடியோ கேமராமேன். எல்லா ஷாட்டும் முடிந்து பேக்கப் சொன்னதும் இந்திராவை ஆட்டோவில் ஏற்றி ... அவள் கையில் பணத்தை திணித்தான் மகேஷ்.

"உன்னோட கவலை எனக்குப் புரியுது இந்திரா. நடிக்க நீ சான்ஸ் தேடி அலைஞ்சப்பல்லாம் விதவைப் பெண் வேஷம். போன மாசம் உன் கணவர் இறந்த நிலையில் சர்வ அலங்காரத்தோட இன்று மணப்பெண் வேஷம். இன்னிக்கு கிடைச்ச பணம் குழந்தைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு சரியா இருக்கும். நாளைக்கு இதே சீனோட கன்டினியூட்டி இருக்கு, ஆட்டோ பிடிச்சு வந்துடு."

அவளின் அழுகைச் சத்தம் ஆட்டோ சத்தத்தில் கரைந்து போனது.

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...