Total Pageviews

Monday, November 23, 2015

சிங்கமாய் இரு. நாயைப் போல இராதே!



ஞானியைச் சந்தித்த பக்தன் ஒருவனிடம் சிங்கமாய் இரு. நாயைப் போல இராதே! என சுருக்கமாக அறிவுரை கூறினார். 

அதன் உள்ளர்த்தம் விளங்காத பக்தன், ஞானியையே விளக்கம் தர வேண்டினான்.

ஒரு சிங்கத்தின்மீது அம்பு எய்யப்படுமானால் அது அம்பை பொருட்படுத்தாமல், எய்தவனை நோக்கியே பாயும். ஒரு நாயின் மீது எதையாவது வீசி எறிந்தால், அது எறியப்பட்ட பொருளை நோக்கியே ஓடும். எறிந்தவனைப் பற்றிக் கவலைப்படாது.

அதுபோல் வாழ்வில் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரும்போது சிங்கத்தைப்போல் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், அதை அளித்த இறைவனைப் பற்றி நினைக்க வேண்டும். 

பிரச்னைகளைத் தீர்க்கும் வழியையும், வலிமையையும் எனக்குத் தர வேண்டும் என அவரிடம் பிரார்த்திக்க வேண்டும். அதை விடுத்து நாயைப் போல் பிரச்னைகள் பின்னே ஓடக்கூடாது! 
 என ஞானி கூற, தெளிவு பெற்றான் பக்தன்.

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...