Total Pageviews

Thursday, November 21, 2013

வெங்காய வியாபாரி


ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில், தரை துடைக்கும் பணியாளராக, ஒருவர் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்திற்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணிபுரியும், அனைவரின் இ மெயில் முகவரியை கேட்டார். கம்ப்யூட்டர் குறித்து, எதுவும் தெரியாத, தரை துடைக்கும் பணியாளருக்கு, இ மெயில் முகவரி கிடையாது. அதை மேலாளரிடம் தெரிவித்தார். "கம்ப்யூட்டர் நிறுவனத்தில், வேலை பார்ப்பவருக்கு, இ மெயில் இல்லை என்றால் எப்படி?' எனக் கூறி, அந்தப் பணியாளரை, மேலாளர் வேலையில் இருந்து நீக்கினார்.

வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. தன் சேமிப்பில் இருந்த, 1,000 ரூபாயைக் கொண்டு, சந்தையில், வெங்காயம் வாங்கினார். அதை குடியிருப்பு பகுதிகளுக்கு, எடுத்துச் சென்று, கூவி கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியானார்.

இச்சூழ்நிலையில், ஒரு வங்கியில், கணக்கு துவக்குவது தொடர்பாக, வங்கி ஊழியர், அந்த வியாபாரியை சந்தித்தார். கணக்கு துவக்குவதற்கான விவரங்களை, படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ மெயில் முகவரியை எழுதுவதற்காக, முகவரியை கேட்டார்.அதற்கு, அந்த மனிதர், "எனக்கு கம்ப்யூட்டர் குறித்து எதுவும் தெரியாது. எனவே, இ மெயில் முகவரி இல்லை' எனப் பதில் அளித்தார். உடனே, அந்த வங்கி ஊழியர், 'இ மெயில் இல்லாமலே, இந்த அளவு முன்னேறி இருக்கிறீர்கள். உங்களுக்கு, கம்ப்யூட்டர், இ மெயில், இன்டர்நெட் குறித்து தெரிந்திருந்தால், எந்த அளவு முன்னேறி இருப்பீர்கள்?' என, ஆச்சரியமாக கேட்டார்.

அதற்கு அந்த வெங்காய வியாபாரி, "அது தெரிந்திருந்தால், ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில், தரை துடைத்துக் கொண்டிருப்பேன்' என்றார்.எனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது, வருத்தப்படாதீர்; முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும்

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...