Total Pageviews

Saturday, September 13, 2025

பெற்ற தாயை பெண்டாட்டிக்காக விட்டுத் தருபவன் ஆம்பளையே இல்லை.

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த '#முதியோர்இல்லம்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன் ஏன் என்னவாம் ...?
இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம்…
"இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...?
நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...!
இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. 'பொண்ணு படிப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'...என்றாள்
சரி... சரி...
விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது. மறுநாள் காலை அம்மாவை பார்க்க'முதியோர் இல்லம்' சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க,
அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் 'ஒரு கவரை' கொடுத்தாங்க. அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு '2 லட்ச ரூபாய்க்கான டி.டி யும்', ஒரு கடிதமும் இருந்தது.
படித்த அவன் அதிர்ந்து போனான் அதில்
அன்பு மகனுக்கு, உன் தந்தை இறந்தபோது 'உன்னை நான் சுமையாக' அப்போது நினைக்கவில்லை. இப்போதும் உனக்கு 'நான் சுமையாக' இருக்க விரும்பவில்லை.
உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் 'உடல் உழைப்பை தர முடியவில்லை. நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை.
இந்த நிலையில் என்னால் என்ன செய்யமுடியும் ?
ஆனாலும் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தபோது செல்வந்தர் ஒருவருக்கு அவசரமாக கிட்னி தேவைப்பட்டது. அதனால் எனது "கிட்னீயை" விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.
கடனையெல்லாம் அடைத்து விட்டு என் 'பேத்தியை' நன்கு படிக்க வை..!.
அவள் நாளை 'உன்னை உன் மனைவியை' காப்பாத்துவா.! பாத்துக்க எல்லாத்தையும்,
நீங்க எல்லாம் 'நல்லாருக்க' நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்...!
நான் போகிறேன்...?
அன்பு அம்மா ...!
அவன் அப்படியே 'இடிந்து' போய் விட்டான். இன்றுவரை 'மனதிற்குள் சொல்லி'... சொல்லி...
'அழுது' கொண்டுதான் இருக்கிறான்...!
நண்பா...!
இது ஒரு "கதையல்ல நிஜம்"...!
அன்பு' என்பது 'அன்னையிடம்' மட்டுமே எல்லா காலங்களிலும் 'அமுதமாய்' கிடைக்கும்.
"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!.
பெற்ற தாயை பெண்டாட்டிக்காக விட்டுத் தருபவன் ஆம்பளையே இல்லை.
நான் படித்து நெகிழ்ந்த ஒரு கதை...
தாயை நேசிக்கும் சேய்களின் கண்ணீரில் இருக்கிறது ஈரம் ,,,,,
தாய்க்கு என்றுமே சேய்கள் இல்லை பாரம் ---

Thursday, September 11, 2025

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி !

 

ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான்.

அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.

அவனிடம் சங்கு ஒன்று இருந்தது.

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.

அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான்.

நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத்திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

“இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள்.

பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன்.

மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது.

உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’என்று நினைத்தான் அவன்.

தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான்.

அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல.

அதற்குத் திறமை வேண்டும்.

நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறோம்,” என்றான்.

“எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன்.

நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன்.

“இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம்.

நீயும் வா,” என்றான் திருடர் தலைவன்.

இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர்.

இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

எங்கும் இருட்டாக இருந்தது.

அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர்.

திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர்.

அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது.

திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது.

ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு.

அது கத்தாது என்று சொல்ல நினைத்தான்.

கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம்.

“சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான்.

இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன்.

சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான்.

ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான்.

வலிமையாக ஊதினான்.

சங்கோசை எங்கும் கேட்டது.

அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர்.

பிறகு என்ன?

பிச்சைக்காரனை கூட்டுச் சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர்.

இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி.

Wednesday, September 3, 2025

#மாறாத_தழும்புகள் !

 

மாறாத_தழும்புகள் !

முனியம்மாளுக்கு கணவன் இல்லை ஒரே ஒரு மகன்தான் பொம்பள பிள்ளை கிடையாது மகனுக்கு திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான் மருமகள் மலர்கொடி அவருக்கு தைராய்டு பிரச்சனை அதனால் உடம்பு குண்டாக இருக்கும்..

முனியம்மாள் அரசு பள்ளிக்கூடத்தில் சத்துணவு ஆக்கும் வேலை செய்து வருகிறாள்.

மருமகள் உடம்பு குண்டாக இருப்பதால் அவளால் அதிக வேலை செய்ய முடியாது வீட்டு வேலை மட்டும் செய்வாள்..

மகன் மூட்டை தூக்கும் தொழிலாளி ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு வேலை செய்தால் 250 ரூபாய்க்கு குடித்துவிடுவான்..

பேரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறான்..

மகனுக்கு திடீரென்று ஒரு நாள் உடம்புக்கு சரியில்லாமல் போக 
அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள் மருத்துவமனையில் உங்கள் மகனின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது 50,000 பணம் கட்டுங்கள் என்றார்கள்..

மருமகள் மலர்கொடி ஊருக்கு வந்து வட்டி கொடவாங்கல் செய்யும் வள்ளிக்கண்ணு அவர்களிடம் ரூ.50,000 பணத்தை வாங்கிக் கொண்டு மருத்துவமனையில் செலுத்திய பின் கணவக்கு சிகிச்சையை தொடங்கினார்கள்...

உங்களின் கணவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் பத்து நாட்கள் தொடர்ந்து இங்கே இருக்க வேண்டும் அதற்கு செலவாகும் என்று சொன்னார்கள்.. தாய் மனசு சும்மா இருக்கும் என்ன ?மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பணத்தை நான் தருகிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டால் முனியம்மாள்...

ஊருக்கு வந்து வள்ளிக்கண்ணுவிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று தன் மருமகளிடம் கொடுத்துவிட்டு ஊருக்கு வந்து விட்டாள்...

தன் கணவனை அருகிலிருந்து கவனித்துக் கொண்டாள் மலர்கொடி உடலிலும் சரி ஆகிவிட்டது வீட்டுக்கு வந்து விட்டார்கள் ஆனால் கணவனால் வேலை செய்ய முடியாது.

முனியம்மாள் ஒரு ஆள் வேலை செய்து பேரன் படிக்க வேண்டும்,வீட்டு செலவு எல்லாத்தையும் கவனிக்க வேண்டும், வட்டி பணம் கட்ட வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தால்...

வட்டிக்கு பணம் வாங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது "வள்ளிக்கண்ணு வட்டி பணம் கேட்டு வீட்டுக்கு வந்து விட்டார்..

பணம் இருந்தால் தானே கொடுக்க முடியும் ஐயா இந்த மாதம் பணம் இல்லை அடுத்த மாதம் சேர்த்து தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்..

முனியம்மாள் 2 லட்ச ரூபாயும் வட்டியும் முதலுமாக எப்படி கட்டபோறமோ??என்று நினைத்துக் கொண்டே சத்துணவு சமைத்துக் கொண்டிருந்தாள்..

மறு மாதம் வந்துவிட்டது வள்ளிகண்ணு வீட்டுக்கு வந்தார் வட்டி பணம் என்னாச்சு? என்று கேட்டார் ஐயா இந்த மாதமும் பணம் இல்லை அடுத்த மாதம் பணம் கொடுத்து விடுகிறோம் என்று சொன்னாள் இந்த மதமே கொடுக்க முடியவில்லை அடுத்த மாதம் எப்படி கொடுப்பே?? ??என்று கெட்ட வார்த்தையால் திட்டினார்..
அப்போது மருமகள் மலர் கொடி வீட்டுக்குள் சென்று விட்டாள் முனியம்மா ஒன்று சொல்கிறேன் கேள் உன் மருமகளை என் கூட படுத்து வட்டியை கழிக்க சொல் என்றார் .முனியம்மாளுக்கு தூக்கி வாரி போட்டது போல் இருந்தது..

வழக்கம் போல் வேலைக்கு சென்றால் 
அவர் சொன்ன வார்த்தை மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. 

நாம வேலையில் இருக்கும் போது இறந்து விட்டால் மருமகளுக்கு வேலை கிடைக்கும் உதவித்தொகையும் கிடைக்கும் என்று ஒரு கணம் எண்ணினாள்..

தன் முந்தானை எடுத்தால் தீயில் வீசினால்  தன் சேலை தீப்பிடித்து  மனதை கல்லாக்கி கொண்டு அய்யோ அய்யோ என்று கத்த வில்லை உடல் கருகியது இறந்துவிட்டால் ஆம்புலன்ஸ் வந்தது உடல் கூறு ஆய்வுக்காக எடுத்து சென்றார்கள். 

சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி விட்டது என்று அறிவித்தார்கள்.. மாமியாரின் வேலை மருமகளுக்கு கிடைத்தது உதவி தொகை ஒரு லட்ச ரூபாய் கிடைத்தது அந்த பணத்தை வட்டிக்கு வாங்கிய 
வள்ளிகண்ணுக்கு கொடுத்து விட்டாள்.

மீதி பணத்தை கொஞ்சம் கொஞ்சமா தருகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டாள். 

மாமியார் வேலையை மருமகள் பார்த்தாள் 

மறு மாதம் பிறந்து விட்டது 
காலையில் வள்ளிகண்ணு  வீட்டுக்கு வந்து விட்டார் வட்டி பணம் கொடு என்றார் ஐயா பணம் இல்லை அடுத்த மாதம் சேர்த்து தருகிறேன் என்று சொல்லும்போது 
மகன் அம்மா நான் கல்லூரிக்கு போயிட்டு வாரேன் என்று சொன்னான்..

நீ எல்லாம் படிச்சு கலெக்டரா ஆக போற?? என் வீட்டில் வந்து மாடு மேய்த்து வட்டி கட்டு என்று சொன்னார்.. சரி ஐயா அவன் கல்லூரி விடுமுறை நாட்களில் மாடு மேய்க்க வருவான் என்றாள். மலர் கொடி 

அப்படி இருந்தும் அவர் வாய் அடங்கவில்லை இப்படி ஊரான் பணத்தில் உடம்பை வளர்க்க வேண்டுமா?? என்று கேட்டார் மகனுக்கு கோபம் வந்துவிட்டது வள்ளிக்கண்ணுவை அடிக்க பாய்ந்தான்  அம்மா தடுத்துவிட்டாள். மகனே இவரை அடிக்க வேண்டாம் வேறு விதமாக அடிக்க வேண்டும் என்று சொல்லி விட்டாள்..
மகனுக்கு ஒன்றும் புரியவில்லை..

சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் வள்ளிக்கண்ணு வீட்டுக்கு போய் மாடு மேய்த்து வந்தான் மகன்.. கல்லூரி படிப்பை முடித்தான் ஐயா ராசா கலெக்டருக்கு படிக்க என்ன செய்ய வேண்டும் என்று அம்மா கேட்டாள் 
அம்மா அதற்கு (ஐ ஏ எஸ்) படிக்க வேண்டும் என்று சொன்னான்.
நீ கலெக்டர் ஆக வேண்டும் என்றாள் இவனும் விடாம முயற்சி செய்து  ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்றான்.

நல்ல சம்பளமா வாங்கி வட்டியும் முதலுமாக வள்ளிக்கண்ணுவுக்கு கொடுத்து விட்டார்கள்....

தன்னுடைய சொந்த மாவட்ட கலெக்டராக மாறுதல் வந்து... (காலச்சக்கரம் சுற்றும் அல்லவா?)

வட்டி கொடவாங்கள் வாங்கல் வள்ளிக்கண்ணு பணத்தை எல்லாம் பிள்ளைகள் பிடுங்கிக் கொண்டு அவரை சோத்துக்கு கூட வழியில்லாமல் ஆக்கிவிட்டார்கள்...
அந்த சமயம் தமிழக அரசு முதியோர் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அறிவிப்பு வந்தது. ஊரிலுள்ள முதியோர்கள் எல்லோரும் விண்ணப்பித்தார்கள் வள்ளிக்கண்ணும் விண்ணப்பித்திருந்தார்..

எல்லா விண்ணப்பங்களும் ஆட்சியர் கைக்கு சென்றது தன்னுடைய கிராமத்தில் உள்ள முதியோர்களின் விண்ணப்பத்தை தனியாக எடுத்தார்.
அதில் வள்ளிக்கண்ணு பேரும் இருந்தது அதை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தார் தன் அம்மாவிடம் விசாரித்தார் அவர் பணத்தை எல்லாம் மகன்கள் பிடுங்கி விட்டார்கள் இப்போது சாப்பாட்டுக்கு கூட வழியில்லை என்றாள்.

அம்மா முதியோர் உதவி தொகை வேண்டும் என்று வள்ளிக்கண்ணு விண்ணப்பித்திருக்கிறார் என்று மகன் கூற மகனே நீ என்கிட்ட கேட்டயா நான் இவரை அடிக்கவா என்று இப்போது அடி என்றாள்.. எப்படி அம்மா அடிப்பேன்?? என்றான் வார்த்தைகளால் அடி என்றால் அம்மா.

கலெக்டர் நம்ம ஊருக்கு வருவதை தெரிந்த வள்ளிக்கண்ணு கலெக்டர் வீட்டுக்கு வந்தார். ஐயா என்னுடைய பெயர் வள்ளிக்கண்ணு என்றார் எனக்கும் நல்ல தெரியும் ஐயா நான் கலெக்டராக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று சொன்னார்..
எனக்கு புரியவில்லையே என்று சொன்னார் வள்ளிக்கண்ணு
எங்க அம்மா உங்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்கள். அப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள் ஊரான் பணத்தில் இப்படி உடம்பை வளர்க்க வேண்டுமா?? என்று கேட்டீர்கள். அது மட்டும் இல்லாமல் நீ படிச்சு கலெக்டர் ஆகப் போற? என் வீட்டுல மாடு மேய் என்று சொன்னீர்கள?? அந்த வார்த்தை தான் இன்று என்னை கலெக்டர் ஆக்கியிருக்கிறது...
என் உடம்பில் எத்தனையோ காயங்கள் ஏற்பட்டிருக்கிறது எல்லாம் தழும்புகளும் மறைந்து விட்டது ஆனால் நீங்க சொன்ன அந்த (காயத்தின் தழும்பு மட்டும் இன்னும் மாறவில்லை). ஊரான் பணத்தில் உடம்பை வளர்க்க வேண்டுமா என்று சொன்ன வார்த்தை. வள்ளிக்கண்ணு தலை குனிந்து விட்டார் ஐயா உங்களை பழி வாங்க வேண்டும் என்று நினைத்தால் நான் உங்க விண்ணப்பத்தை இப்போதே கிழித்து போட முடியும் ஆனால் அதை செய்ய மாட்டேன். கண்டிப்பாக உதவி தேவை கிடைக்கும் காலம் சக்கரம் சுழண்டு கொண்டே இருக்கும் மறந்து விடாதீர்கள்....

ஆயுதம் எடுக்காதே 
அறிவை பயன்படுத்து...

உண்மையும் கற்பனையும் கலந்த
கதை....

Thursday, January 9, 2025

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

 

ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொண்டி ருந்தாள். அந்த கன்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளை கள்  இவளைக்கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள். நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு இந்த பெண்ணைப் பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம் அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.

அவன் அம்மா ஏற்கனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள். இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.

போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”

அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான். ஆனால் அவன் அன்னை நொந்து போய்விட்டதோடு மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.

மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று  திருமணத்துக்கு ஒத்துக் கொண்டாள்.

திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்

கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்று கொண்டு இருந்தது.

இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..

அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால் அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில்

படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.

அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக் கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின் தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.

இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்துபோனதோடு, தான் போட்ட கன்டிசன்களை எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.

இதுதான் மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை!

விருந்தும் மருந்தும் மூன்று நாள்!

 

புதிதாக திருமணம் இளைஞன் ஒருவன் மாமியார் வீட்டுக்கு கிளம்ப தயராக இருந்தானாம். போகும் போது தனது தாயிடம்" அம்மா, நான் எனது மாமியார் வீட்டிற்கு போய் வருகிறேன் நான் எப்போது திரும்பி வரட்டும்" என்று கேட்க அதற்கு அவனது தாயார், உனது முகம் எப்போது உனக்கு தெரிகிறதோ அப்போது நீ கிளம்பி வந்து விடு". என்று கூறினார்.

புது மாப்பிள்ளை தனது மாமியார் வீட்டிற்கு சென்றதும் மாப்பிள்ளை பெண்ணுடன் வந்ததும் மாமியாருக்கு தலையும் வாலும் புரியவில்லை. தினம் தினம் புது புது பலகாரம் செய்து போட மருமகன் ஆகா என்று எண்ணி வக்கனையா வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்க தன் ஊர் நினைப்பே வரவில்லை. மாமியாரும் இதோ இன்று ஊருக்கு கிளம்பிவிடுவார் நாளை கிளமபுவார் என் நினைக்க நினைப்பு பொய்த்து போனது.

எத்தனை நாளைக்கு தான் வகைவகையாய் சமைத்து போடமுடியும்? எனவே முதலில் சாப்பாட்டில் இனிப்பு வகை குறைக்கப்பட்டது. ஆனால் மருமகன் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நன்கு சாப்பிட்டு வந்தார். அடுத்து சில நாட்களில் சாப்பாட்டில் இருந்து கூட்டு வகையறா குறைந்தது. அப்பவும் மருமகன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து சில நாட்களில் பொரியல் குறைந்தது. அதையும் மருமகன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மாமியாரும் பொறுதது பார்த்து சாப்பாட்டில் இருந்து ரசம் நீக்கப்பட்டது. அப்போதும் மருமகன் அசைந்து கொடுக்கவில்லை. அடுத்து சாம்பார் மோர் மட்டுமே பரிமாறப்பட்டது. அதற்கும் மருமகன் ஒன்றும் கூறவில்லை. அடுத்து வந்த நாட்களில் சாப்பாட்டில் சாம்பார் மாயமானது.

இந்நிலையில் ஒருநாள் ஒரு பாத்திரத்தில் சிறிது கஞ்சி கொண்டு வந்து வைத்தார் மாமியார். மருமகனும் ஏதோ புதிய ஐயிட்டமாக இருக்கும் என்று எண்ணி பாத்திரத்தில் என்ன உள்ளது என்று பார்க்க குனிந்தான். அதை பார்த்த அவனுக்கு அப்பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி வைக்கப்பட்டு இருந்தது. அதில் அவன் முகம் தெரிந்தது. அப்போதுதான் அவனுக்கு அவன் தாயார் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது.

இதென்ன இதில் நமது முகம் தெரிகிறது. முகம் தெரிந்தால் வந்து விடு என்று தாயார். கூறியது இதைத் தானோ என்று என்னி உடனே ஊருக்கு கிளம்பிவிட்டார்.

விருந்தும் மருந்தும் மூன்று நாள். மனிதர்கள் வாழ்விலும் இப்படித்தான். குடும்பத்தில், நண்பர்களிடத்தில், அலுவலகத்தில், சமூகத்தில் தங்கள் எல்லை எதுவரை என்பதை உணர்ந்து அளவாக அடியெடுத்து வைப்பவர்கள் வாழ்வில் வென்று விடுவார்கள்.

பெற்ற தாயை பெண்டாட்டிக்காக விட்டுத் தருபவன் ஆம்பளையே இல்லை.

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த '#முதியோர்இல்லம்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!...