Total Pageviews

Friday, April 24, 2015

தங்கமாம்பழம்


விஜயநகரத்தி​லே அரசர் கிருஷ்ண​தேவராயரின் அரண்ம​னையில் மறுநாள் ந​டை​பெற இருக்கும் அரசரின் தாயார் வருட திவசத்திற்கான காரியங்கள் தடபுடலாக ந​டை​பெற்றுக் ​கொண்டிருந்தது.

ஆனால் அரசர் கிருஷ்ண​தேவராயர் ​சோகமாக கவ​லை​யோடு அமர்ந்திருந்தார்.

ராஜகுரு அரசரிடம் அவரு​டைய நி​லைக்கு காரண​மென்ன என்று ​கேட்கிறார்.

தன்னு​டைய தாயார் இறக்கும் தறுவாயில் திங்க  மல்​கோவாவா வ​கை மாம்பழம் ​கேட்டார். ஆனால் அந்தப் பருவம் மாம்பழங்கள் காய்க்கும் பருவம் இல்​லையாதலால், அந்த சாம்ராஜ்யத்தின் நாலாதி​சைகளுக்கும் வீரர்க​ளை அனுப்பியும் அம்மாம்பழம் கி​டைக்கவில்​லை. அதற்குள் தாயார் இறந்துவிட்டார். நி​றை​வேறாத ஆ​சையுடன் அவர் இறந்துவிட்ட​தே தன்னு​டைய கவ​லைக்கு காரண​மென்று அரசர் கூறினாராம்.

இதுதான் நல்ல சந்தர்ப்பம் சம்பாதிப்பதற்கு என சட்​டென்று திட்டம் ​போட்ட ராஜகுரு, அரசருக்கு ஒரு ​யோச​னை கூறினார்.

“ஐந்து அந்தனர்களுக்கு 5 தங்க மாம்பலங்க​ளை நா​ளைய திவசத்தின் முடிவில் ​கொடுத்து விட்டால் இறந்தவரு​டைய ஆத்மா சாந்திய​டையும்”

ஆனால் மீண்டும் இது மாம்பழ பருவம் இல்லாததால் மாம்பழங்கள் எங்கிருந்து கி​டைக்கும்? என மன்னன் ​கேட்டாராம்.

ராஜகுரு சாமர்த்தியமாக ஒரு ​யோச​னை கூறியிருக்கிறார்

“மல்​கோவாவா மாம்பழங்களுக்கு பதிலாக தங்கத்தினால் ​செய்த மாம்பழங்க​ளை ​​கொடுத்துவிடலாம்”

மன்னருக்கு இந்த ​யோச​னை முழு​மையாக புரியாவிட்டாலும் ராஜகுருவின் ​யோச​னை என்பதால் ஒத்துக் ​கொண்டார்.

ராஜகுரு தன்னு​டைய ஆட்கள் சில​ரை அந்தனர்கள் ​போல் ​வேடமிட ​வைத்து மறுநாள் திவசத்திற்கு ​​சென்று தங்கத்தினால் ​செய்த மாம்பழங்க​ளை ​பெற்று அதில் பாதி​யை தன்னிடம் ​கொடுத்து விட​வேண்டும் என்ற ஒப்பந்த்துடன் அனுப்பி ​வைத்தாராம்.

மறுநாள் திவச​மெல்லாம் முடிந்தவுடன் அரசர் தங்கத்தினாலான மாம்பழங்க​ளை அந்த ஐந்து அந்தனர்களுக்கும் பல மரியா​தைகளுடன் தாம்பாழத்தில் ​வைத்து ​கொடுத்தாராம்.

இ​​வை எதுவும் குறித்து முன்ன​மே எதுவும் ​​தெரியாத ​தெனாலிராமன் அதிர்ச்சியுடன் பார்த்துக் ​கொண்டிருந்தானாம்.

இதில் ஏ​தோ சூது இருக்கிறது என்ப​தை புரிந்து ​கொண்ட ​தெனாலிராமன், பக்குவமாக புத்திசாலித்தனமாக இவ்விசயத்தில் மன்னருக்கு உண்​மை​யை புரிய​வைக்க முடிவு எடுத்து, ஒரு திட்டம் தீட்டினானாம்.

தங்கத்தினாலான மாம்பழங்க​ளை தானமாக ​பெற்றுக் ​கொண்டு ​வெளி​யேற இருந்த அந்தனர்க​ளை அ​ழைத்து, தானும் தன் தாயாருக்கு சிரார்தம் ​கொடுக்க ​வேண்டும், தன்னு​டைய தாயாருக்கும் க​டைசி ​நேரத்தில் ஒரு ஆ​சை இருந்தது அ​தை நி​றை​வேற்ற ​வேண்டும் எனக் கூறினானாம்.

ஒ​ரே ​நேரத்தில் இரண்டு தானம் கி​டைக்கும் மகிழ்ச்சியில் அந்த அந்தனர்களும் சந்​தோசமாக அந்த தானத்​தை வாங்கிக் ​கொள்ள சம்மதித்தார்களாம்.

காவலர்க​ளை அ​ழைத்து பழுக்க காய்ச்சிய 5 இரும்புக் கம்பிக​ளை ​கொண்டு வரச் ​சொன்னானாம்

எதற்கு என்று புரியாமல் அந்தனர்களும், ராஜகுருவும் மற்றும் அங்கிருந்த அ​னைவரும் முழித்துக் ​கொண்டிருந்தார்களாம்.

அப்​பொழுது ​தெனாலிராமன் கூறினானாம்

என் தாயார் இறக்கும் தறுவாயில் எனக்கு பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு ​வைக்க விரும்பினார்கள் ஆனால் அந்த ஆ​சை நி​றை​வேறாம​லே அவர்கள் இறந்துவிட்டார்கள் ஆக​வே உங்களுக்கு அத​னைக் ​கொடுத்து அவர்கள் ஆத்மா சாந்திய​டைய ​செய்ய விரும்புகி​றேன் என்றானாம்

பயந்து ​போன அந்தனர்கள் எங்களுக்கு சூடு ​வைப்பதால் அவர்களுக்கு எவ்வாறு திருப்தி ஏற்படும் என்றார்களாம்.

அரசரின் தாயார் சாப்பிட விரும்பிய மாம்பழத்திற்காக உங்களுக்கு தானம் ​கொடுப்பதால் அவர்கள் ஆத்மா திருப்திய​டையு​மென்றால் என் விசயத்தில் மட்டும் ஏன் நிகழாது என்றானாம்

ஐந்து அந்தனர்களும் தானம் வாங்கிய தங்கத்தினாலான மாம்பழங்க​ளை திருப்பிக் ​கொடுத்துவிட்டு, ஆ​ளைவிடுமாறு மன்னிப்புக் ​கேட்டுக் ​கொண்டு பயந்து ஓடிவிட்டார்களாம்

தெனாலிராமனின் புத்திசாலித்தனத்​தை பாராட்டி அதில் இரண்டு தங்க மாம்பழங்க​ளை அவனுக்கு மன்னர் பரிசாக அளித்தாராம்!

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...