Total Pageviews

Monday, December 31, 2012

பூனை

வீட்டில்  பூனை வளர்த்தார் ஒருவர். ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடி த்துக்கொன்றது. ஆனந்தக் கூத்தாடினார் அவர்.


அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசையாய்  வளர்த்த கிளியை கவ்விக் கொன்றது. கழியை எடுத்துக் கொண்டு பூனையைத் துரத்தினார் அவர்.

மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த ஒரு குருவியைப் பிடித்துக் கொன்றது. வேடிக்கை பார்த்தபடி இருந்தார் அவர்.ஆனந்தமும் இல்லை, ஆத்திரமும் இல்லை

1) வேண்டாத எலியைக் கொன்ற போது மகிழ்ச்சி.

2) வேண்டிய கிளியைக் கொன்ற போது ஆத்திரம்; துக்கம்
.
3) வேண்டும்,வேண்டாம் என்ற எல்லைக்குள் வராத குருவியைக் கொன்ற போது மகிழ்ச்சியும் இல்லை; துக்கமும் இல்லை.

அது மட்டுமல்ல……

பசிக்கு, தனக்கு வாய்த்த இரை எது வாயினும் அதைப் பிடித்து தின்பது பூனையின் இயல்பு என்ற ஞானம் வந்து விட்டது அவருக்கு.

இந்த மன நிலை தான் யோகியின் சம நிலை.

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...