Total Pageviews

Thursday, November 21, 2024

தேடுனாலும் கிடைக்காது....

கல்லூரியில் படிக்கும் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் ஒரு காதல் கடிதம் வைக்கப்பட்ட புத்தகத்தை கொடுத்தான்.

அதில் அவன்...

"*நீ என்னை காதலிப்பதாக இருந்தால் நாளை நீ கல்லூரி வரும்போது சிவப்பு நிற ஆடை அணிந்து வரவேண்டும்" என்று எழுதியிருந்தான்.

மறுநாள் அவள் மஞ்சள் நிற ஆடையணிந்து கல்லூரிக்கு வந்து அவன் கொடுத்த புத்தகத்தை திருப்பிக் கொடுத்து விட்டு சென்றாள்

இதைப் பார்த்தவுடன் மிகவும் அவமானமடைந்த அவன் அதன் பின் அவளை பார்ப்பதை, நினைப்பதைக் கூட மறந்து போனான்.

வருடங்கள் உருண்டோடின.
அந்தப் பெண்ணிற்கும் திருமணம் ஆனது.

ஒரு நாள் அலமாரியை சுத்தம் செய்யும்போது அந்தப் பெண் திருப்பிக் கொடுத்த அந்த புத்தகம் கீழே விழ அதில் இருந்து ஒரு துண்டுச் சீட்டு.

அதில் இருந்த செய்தி

நானும் உங்களை காதலிக்கிறேன் ❤....


ஆனால் என்னிடம் சிவப்பு நிற ஆடை இல்லை... Sorry!!

நீதி: மாணவர்கள் கொஞ்ச காலத்திற்கு ஒருமுறையாவது புத்தகங்களை திறந்து பார்க்க வேண்டும்.

பின்குறிப்பு:

உடனே உங்களுடைய பழைய புத்தகங்கள் அனைத்தையும் கலைத்து தேடாதீர்கள்.

தேடுனாலும் கிடைக்காது....
 கண்டிப்பா இருக்காது...

நாமதான் எல்லாத்தையும் அப்பவே எடைக்கு போட்டு காசாக்கிருப்போமே !

No comments:

Post a Comment

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...