Total Pageviews

Monday, September 23, 2019

நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது!


சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது. 


மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். 


பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாகருக் கிறார்கள்.  பெண்  அமெரிக்காவில்.

சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடு வீதியில் விட்டுருவாங்க பசங்க' 


என்றார் வக்கீல் செந்தில்நாயகம்.


எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்'

என்ன?


நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க!
நான் பிரிச்சிக் கொடுத்திட்டா! 

என்னை காப்பாத்தாம மறந்துரு வாங்கதான்!


ஆனா நான் சாகணும்னு நினைக்க மாட்டாங்களே!
நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன்!
நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார்!


நான் சாகணும்னு யாரும் நினைக்கக்  கூடாது!

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...