Total Pageviews

Friday, August 19, 2016

நல்ல மனிதர்கள், நல்ல ஒழுக்கம்

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று.

^ வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.

^ அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.

^ புலி கரடியிடம் கூறிற்று:

-இவ்வேடன், 

நமது மிருக குலத்துக்கே பகைவன்;

இவனைக் கீழே தள்ளி விடு என்றது.

-இருக்கலாம் ஆனால், 

இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான்.

-சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

^^^ சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது.

^ நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், 

>>>நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

^ வேடன் கரடியைத் தள்ளிவிட்டான்,

>> கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

^^^அப்போது புலி கரடியிடம் சொன்னது. 

>>இந்த மனிதன் நன்றிகெட்டவன். 

சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். 

-அவனை இப்பொழுதே தள்ளிவிடு என்றது.....

+ அதற்கு கரடி சொன்னது: 

எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக,,

+ நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. 

+ அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. 

+ வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

+ துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது 

சாதாரண மனிதர்களின் இயல்பு. 

+ நல்ல மனிதர்கள், நல்ல ஒழுக்கமான குணம் உள்ளவர்கள், அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்...

+ எந்த சூழ்நிலையிலும் எதுக்காகவும், யார் எப்படி நடந்தாலும், தன்னுடைய ஒழுக்கமான குணத்தை மாற்றி கொள்ள மாட்டார்கள்...

Thanks to C.Malathi

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...