Total Pageviews

Thursday, January 9, 2025

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

 

ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொண்டி ருந்தாள். அந்த கன்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளை கள்  இவளைக்கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள். நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு இந்த பெண்ணைப் பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம் அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.

அவன் அம்மா ஏற்கனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள். இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.

போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”

அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான். ஆனால் அவன் அன்னை நொந்து போய்விட்டதோடு மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.

மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று  திருமணத்துக்கு ஒத்துக் கொண்டாள்.

திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்

கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்று கொண்டு இருந்தது.

இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..

அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால் அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில்

படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.

அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக் கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின் தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.

இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்துபோனதோடு, தான் போட்ட கன்டிசன்களை எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.

இதுதான் மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை!

விருந்தும் மருந்தும் மூன்று நாள்!

 

புதிதாக திருமணம் இளைஞன் ஒருவன் மாமியார் வீட்டுக்கு கிளம்ப தயராக இருந்தானாம். போகும் போது தனது தாயிடம்" அம்மா, நான் எனது மாமியார் வீட்டிற்கு போய் வருகிறேன் நான் எப்போது திரும்பி வரட்டும்" என்று கேட்க அதற்கு அவனது தாயார், உனது முகம் எப்போது உனக்கு தெரிகிறதோ அப்போது நீ கிளம்பி வந்து விடு". என்று கூறினார்.

புது மாப்பிள்ளை தனது மாமியார் வீட்டிற்கு சென்றதும் மாப்பிள்ளை பெண்ணுடன் வந்ததும் மாமியாருக்கு தலையும் வாலும் புரியவில்லை. தினம் தினம் புது புது பலகாரம் செய்து போட மருமகன் ஆகா என்று எண்ணி வக்கனையா வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்க தன் ஊர் நினைப்பே வரவில்லை. மாமியாரும் இதோ இன்று ஊருக்கு கிளம்பிவிடுவார் நாளை கிளமபுவார் என் நினைக்க நினைப்பு பொய்த்து போனது.

எத்தனை நாளைக்கு தான் வகைவகையாய் சமைத்து போடமுடியும்? எனவே முதலில் சாப்பாட்டில் இனிப்பு வகை குறைக்கப்பட்டது. ஆனால் மருமகன் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நன்கு சாப்பிட்டு வந்தார். அடுத்து சில நாட்களில் சாப்பாட்டில் இருந்து கூட்டு வகையறா குறைந்தது. அப்பவும் மருமகன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து சில நாட்களில் பொரியல் குறைந்தது. அதையும் மருமகன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மாமியாரும் பொறுதது பார்த்து சாப்பாட்டில் இருந்து ரசம் நீக்கப்பட்டது. அப்போதும் மருமகன் அசைந்து கொடுக்கவில்லை. அடுத்து சாம்பார் மோர் மட்டுமே பரிமாறப்பட்டது. அதற்கும் மருமகன் ஒன்றும் கூறவில்லை. அடுத்து வந்த நாட்களில் சாப்பாட்டில் சாம்பார் மாயமானது.

இந்நிலையில் ஒருநாள் ஒரு பாத்திரத்தில் சிறிது கஞ்சி கொண்டு வந்து வைத்தார் மாமியார். மருமகனும் ஏதோ புதிய ஐயிட்டமாக இருக்கும் என்று எண்ணி பாத்திரத்தில் என்ன உள்ளது என்று பார்க்க குனிந்தான். அதை பார்த்த அவனுக்கு அப்பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி வைக்கப்பட்டு இருந்தது. அதில் அவன் முகம் தெரிந்தது. அப்போதுதான் அவனுக்கு அவன் தாயார் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது.

இதென்ன இதில் நமது முகம் தெரிகிறது. முகம் தெரிந்தால் வந்து விடு என்று தாயார். கூறியது இதைத் தானோ என்று என்னி உடனே ஊருக்கு கிளம்பிவிட்டார்.

விருந்தும் மருந்தும் மூன்று நாள். மனிதர்கள் வாழ்விலும் இப்படித்தான். குடும்பத்தில், நண்பர்களிடத்தில், அலுவலகத்தில், சமூகத்தில் தங்கள் எல்லை எதுவரை என்பதை உணர்ந்து அளவாக அடியெடுத்து வைப்பவர்கள் வாழ்வில் வென்று விடுவார்கள்.

Sunday, December 22, 2024

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

 

ரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.

முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.

இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான்.

இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கணவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கணவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புலம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கணவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கணவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கணவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார்

மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...

அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

Saturday, December 21, 2024

குரு மாமா.... சோடா ஊத்தலையா! ப்ளாக்_டீயும்_ப்ளாக்கான_திருமணமும்!

 

குரு மாமாவின் கதை..

இன்னும் ஏன் நீ திருமணம் பண்ணிக்கலனு எல்லோரும் பேஸ்புக் ல என்ன கேக்குறாங்க

ஏன் எனக்கு கல்யாணம் ஆகலைன்ற ரகசியத்த இப்ப நான் உங்களுக்கு சொல்ல போறேன் ஃபிரண்ட்ஸ்

அன்றொரு நாள்

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.

ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்.

இன்னொரு தட்டுல சிக்கென் கட்லெட், பருப்பு வடை, பழ, பஜ்ஜி.!

குடிக்க காப்பியா டீயான்னு அவங்க கேட்க...

எல்லாரும் டீ, காப்பி ன்னு ஆர்டர் பண்ண...

நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு.. என் கலர்க்கு பொருத்தமா

"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....

டீயும் வந்துச்சு...

எல்லோருக்கும் என்னையும் பிடித்து போக...,

பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து பழ, பஜ்ஜியை ஒரு கடி கடித்து...,

ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..

எங்க தங்கச்சி பையனுக்கு என்ன தோணிச்சோ...

திடீர்ன்னு,

"குரு மாமா மாமா....

சோடா ஊத்தலையா"ன்னு கேட்க..

Rest is History.....

ப்ளாக்_டீயும்_ப்ளாக்கான_திருமணமும்

😭😭😭😭

மாமாவ முதியோர் இல்லத்துல சேத்துடலாம்ன்னு சொல்லுறேன்.“

 

“அக்கா... நான் சொல்லுறதை நீ நல்லா கேளு....“ என்று சின்ன மருமகள் பெரிய மருமகளிடம் கிசுகிசுத்தது வீட்டினுள் நுழைந்த சுந்தரத்தின் காதில் விழுந்ததும் சற்று தயங்கி நின்று காதைக் கூர்மையாக்கினார்.

“நம்ம மாமியார் மாரடைப்புல போயி இதோ நாலு மாசம் ஆயிடுச்சி. அத்தை இருந்தப்போ மாமாவை அவங்களே கவனிச்சிக்கினாங்க.. இப்போ நாம தான்... நாமும் எவ்வளவு நாளைக்குத் தான் இப்படியியே அவரையும் கவனிச்சிக்கினு இந்த ஒண்டு குடித்தனத்துல வாழுறது... நாமும் மத்தவங்க மாதிரி தனியா வாழ வேணாமா...?“ என்று கேட்டாள் சின்னவள்.

“அதுக்காக நம்ம புருஷனுங்க சம்பாதிக்கிற சம்பாதியத்துல இந்த டவுனுல நாலாயிரம் அஞ்சாயிரம் வாடகை கொடுத்து தனியா போக முடியுமாடி...?“ இது கவலையுடன் பெரியவள்.

“முடியாது தான். அதுக்குத் தான் நான் ஒரு ஐடியா சொல்லுறேன். நம்ம புருஷங்க ரெண்டு பேரும் மாமா கடைக்குப் போவாத இந்த நாலு மாசத்துல கடைய நல்லா கவனிச்சித் தொழிலைக் கத்துக்கினாங்க. இனி மாமாவோட தயவு இல்லாமலேயே இவங்க சம்பாதிப்பாங்க. அதனால மாமாவ முதியோர் இல்லத்துல சேத்துடலாம்ன்னு சொல்லுறேன்.“ என்று அழுத்தமாகச் சொன்னாள் சின்னவள்.

“என்ன சொல்ல வர்ற நீ...?“ பெரியவள் புரியாமல் கேட்டாள்.

“ஐயோ... ஒனக்கு ஒன்னும் புரியாது. மாமாவ முதியோர் இல்லத்துல சேர்த்துட்டா... மேல் வீட்டுல வாடகை இருக்கிறவங்களைக் காலிபண்ணிட்டு நானும் அவரும் குழந்தையுடன் அந்த வீட்டீல தங்கிக்கிறோம்... நீ மாமா பிள்ளைகளோட இங்கேயே கீழ் வீட்டுல இருந்துக்கோ... என்ன புரியுதா...?“

“புரியுது... இதுக்கு நம்ம புருஷருங்க ஒத்துக்குவாங்களா...?“ கவலையுடன் கேட்ட பெரியவளின் முகம் பார்த்து “அது நம்ம கையில தான் இருக்குது...” என்று அழுத்தமாகச் சொன்னாள் சின்னவள்.

சுந்தரம் அவ்விடத்தை விட்டு கவலையுடன் அகன்றார்.

இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிறு காலை இருமகன்களும் சுந்தரத்தின் எதிரில் வந்து தயங்கி நின்றார்கள். அவர்கள் தயங்கிய விதத்திலேயே தெரிந்தது மகன்களின் மனது.

“அப்பா... நாங்க உங்ககிட்ட முக்கியமா கொஞ்சம் பேசனும்“ அவன் தயங்கியப் பேச்சிலிருந்தே என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டார் சுந்தரம்.

“சொல்லுப்பா...”

“அப்பா... வந்து எனக்கும் ரெண்டு பிள்ளைங்க ஆயிடுச்சி... தம்பிக்கும் கொழந்தை இருக்குது... அதனால... வந்து...“

அவன் மென்று விழுங்கி வார்த்தையை வெளியே துப்புவதற்குள் சுந்தரம் குரலைக் கணைத்துக்கொண்டு பேச்சை ஆரம்பித்தார்...

“ஆமாம்... நான் கூட இதை யோசிச்சேன். எவ்வளவு காலம் தான் இப்படியே இருக்கிறது...? உங்களுக்குன்னு குடும்பம் குழந்தைன்னு ஆயிடுச்சி.. நீங்க ரெண்டு பேரும் தொழிலையும் நல்லா கத்துக்கினீங்க. அதனால பேசாம நீங்க ரெண்டு பேரும் வெளிய வீடு பாத்துக்கினு தனிகுடித்தனம் போங்கப்பா...“ என்றார்.

அவர் சொன்னதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு தன் மனைவியரைப் பாவமாகப் பார்த்தார்கள். இப்படி அவர் சொல்லுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

“அது எப்படி மாமா... ஊரு என்ன சொல்லும்...?“ சின்னவள் குரல் வெளிவந்தது.

“ஊரு... நாம என்ன செய்தாலும் அதற்கு எதிர் மறையா தான் சொல்லும். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இது என்னோட வீடு. நானும் என் மனைவியும் வாழ்ந்த வீடு. கடைசி காலத்துல அவ நினைவோட நான் வாழ நினைக்கிறேன். எனக்கு பென்சன் வருது. மேல்வீட்டு வாடகை வருது. என் நண்பனுடைய பேரன் படிக்கிறதுக்கு இங்க வந்து தங்கிக்கிறேன்னு சொன்னான். வேலைக்கு ஒரு ஆள வச்சிக்கினா போவுது... நீங்க கிளம்புற வழியைப் பாருங்க...“ சுந்தரம் சொல்லிவிட்டு நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தார்.

நால்வரும் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தனர்.

நான் என்னோட காதலியைப் பார்க்க போய் கிட்டு இருக்கேன்

 

திருச்சி செல்ல வேண்டி இருந்ததால், ஏற்கனவே முன் பதிவு செய்திரஎனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஒரு எழுபது வயது மதிக்க தக்க மிடுக்கான தோற்றத்தில் ஒருவர் ஏறி எனது இருக்கை அருகில் அமர்ந்தார்.

அவருக்கு நடு சீட் இருந்தாலும் எனது இருக்கை வேண்டும் என்பதுபோல பார்த்தார். அவரது பார்வையை புரிந்துகொண்டு எழுந்து இடம் கொடுத்தேன் .

ஒரு நாலு மணி நெரத்தில் திருச்சி வந்துவிடும்.

அவர் பார்வையால் நன்றி தெரிவித்து ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் . ஈரோடு ஜங்ஷன் வந்தபோது இரண்டு திருநங்கைகள் கை தட்டியபடி வந்தபோது, சிலர் தூங்குவது போல நடிக்க சிலர் நகர்ந்து வேறுபக்கம் சென்றனர்.

என் அருகில் இருந்த பெரியவர் அவர்களை அழைத்து இருவருக்கும் நூறு, நூறு ரூபாய் கொடுத்தார். நான் ஆச்சரியமாக அவரைப் பார்த்தேன்.

எனது ஆச்சரியத்தைப் பார்த்து மெல்ல சிரித்து,

“ அவர்கள் பிறப்பால் கல்யாணம், காட்சி, குடும்பம் அப்படி எதுவும் இல்லாம இருக்காங்க. நாம பணம் கூட கொடுத்து உதவலேனா எப்படி?” என்றார்.

எனக்கு சுருக் என்று தைத்தது.

“சார் உங்களுக்கு பேரன், பேத்திங்க இருக்காங்களா? பசங்க என்ன பண்ணறாங்க? கோயம்பத்தூரில் எங்க இருக்கீங்க?”

“நான் மும்பைல இருக்கேன். எனக்கு கல்யாணம் ஆகலை”

நான் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தேன்

என் பார்வையை புரிந்துகொண்டு மெல்ல சிரித்தார்.

“நான் என்னோட காதலியைப் பார்க்க போய் கிட்டு இருக்கேன்”

மேலும் ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தார்

“காதலினு சொல்லறீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கலை?:

“அவங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சு நான் அவங்களை மறக்க முடியாமல் வேற கல்யாணம் பண்ணிக்கலை”

“அவங்க திருச்சில

இருக்காங்களா?”

“தெரியாது... ஆனா ஒரு நாப்பது வருஷம் கழிச்சு மீட் பண்ணிக்கலாம்னு சொல்லி வச்சுக்கிட்டோம். அவங்க இந்த விநாயகர் சதுர்த்திக்கு திருச்சி கோட்டையில் இருக்கற பிள்ளயார் கோவிலுக்கு

சாயங்காலம் வருவாங்க”

"அதெப்படி கரெக்டா கண்டு பிடிப்பீங்க?"

அவரது பர்ஸ் எடுத்து திறந்து காண்பித்தார்

சின்ன வயது பெண் கண்ணீரோடு இருக்கும் புகைப்படம். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சின்னதாக பொட்டு வைத்திருந்தாள்.

அவருடை சின்ன வயது புகைப்படம் இருந்தது. . அவரும் அழுதபடி புகை படத்தில் இருந்தார்.

“நாங்க பிரிந்த நாள் எடுத்துக் கொண்ட போட்டோ... அவ மனசில இருக்கா.. கண்டிப்பா அடையாளம் கண்டு பிடித்து விடுவேன்”

இத்தனை ஆசையா இருக்கீங்க! ரெண்டு பேரும் கல்யாணம் “பண்ணிக்கிட்டு இருந்திருக்கலாமே”

“நாங்க முஸ்லீம்.

கடை வச்சிருந்தோம். வாராவாரம் கோயிலுக்கு குடும்பத்தோடு வருவாங்க. செருப்பு எங்க கடையில் தான் வாங்குவாங்க. எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தது.

“சார்! யாரு சார் முதல லவ் சொன்னது? நீங்க தானே?

அடக்க முடியாமல் கேட்டு விட்டேன்.

“ லவ் சொன்னது அவங்க தான்! பிரிஞ்சுடலாம்னு சொன்னதும் அவங்கதான்!”

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை போய் வேண்டாம்னு சொல்வாங்களா?

“தம்பி அவங்க வீட்டில விஷயம் தெரிஞ்சிடுச்சு! எல்லோரும் மிரட்டி வச்சிட்டாங்க! அவங்களை எதிர்த்துக்கிட்டு வர அவளால முடியலை. அவ என்ன செய்வா பாவம்?”

“சரி நீங்க வேற கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே!”

மனசு பூரா அவ இருக்காப்பா!

அவர் சிரித்தபடி சொன்னாலும் வேதனையை சிரித்தபடி மறைப்பது தெரிந்தது.

எனக்கு அவர் கூட மலைக்கு சென்று அவரது காதலியைப் பார்க்க மனசு ஆசைப்பட்டது. மெதுவாக என் விருப்பத்தை தெரிவித்தேன்.

அவர் எனது கரத்தை அழுத்தப் பற்றினார். .

திருச்சி நெருங்க, நெருங்க ஆர்வத்தோடு மலைக் கோட்டையைப் பார்த்தார். .அவரது ஆர்வம் கண்களில் தெரிந்தது. எனது வேலையை ஒத்தி வைத்து விட்டு மாலை ஐந்து மணிக்கே கிளம்பி அவர் சொன்ன இடத்துக்கு வந்து நின்று கொண்டேன். ..அவர் எனக்கு முன்பே வந்து விட்டார்.

சரியாக ஆறு மணிக்கு ஒரு பாட்டி பேத்தியுடன் கண்களில் ஆர்வத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள்..

பேத்தியை பார்த்தவுடன் அவரது சின்ன வயது காதலி தோற்றத்தில் இருந்ததால் பாட்டிதான் அவரது காதலி என்று புரிந்து கொண்டேன்.

சிறுவயது புகைப் படத்தில் புருவங்களுக்கு மத்தியில் சின்ன கருப்பு பொட்டு இப்போது பெரிய சிவப்பு பொட்டு அப்படியே இருந்தார். அவரும் அவரை புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

எங்களைப் பார்த்ததும் பாட்டியின் நடையில் வேகம் தெரிந்தது.

எங்கள் அருகில் வந்தவர் முதலில் அவரது பேத்தியை அறிமுகப்படுத்தினார்.

“ இவ என்னோட பேத்தி ப்ரீத்தி “

ப்ரீத்தி எங்களுக்கு வணக்கம் தெரிவித்தாள்.

என்னைப் பார்த்து அவரிடம், “ நான் யார்? என்பதுபோல பார்த்தார்.

பெரியவர், “ இது என்னோட மகன் அப்துல்” என்றார் . எங்கள் இருவரையும் அன்போடு பார்த்து எனக்கு ஆசிர்வதித்தார் .

இருவரும் வேறு ஒன்றும் பேசத் தோன்றாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நான் அடக்க முடியாமல்

அம்மா நீங்க எங்க இருக்கீங்க திருச்சிதானா?

“நாங்க டெல்லில இருக்கோம் இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் வரோம் நாளைக்கு திரும்பிடுவோம் இவளுக்கு எக்ஸாம் இருக்கு” என்றார் .

“உங்க வீட்டுக்காரர் நலமா?”

“ம்ம்.. நல்லா இருக்காரு”

பேத்தி பாட்டியை நிமிர்ந்து பார்த்தாள். .

“உங்க அம்மா நல்லா இருக்காங்களா?”

“ம்ம்.. நல்லா இருக்காங்க”

நான் உடனே பதில் சொல்லி பெரியவரைப் பார்த்தேன்.

அவர் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் சொல்லிக் கொண்டு சென்றபின் திரும்பி நடக்க ஆரம்பித்தோம் .

பாட்டியிடம் செல்போன் நம்பர் வாங்காதது ஞாபகத்திற்கு வந்தது. .

அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

நான் அவர்கள் பின்னே சென்று கொண்டிருந்தபோது,

“ஏன் பாட்டி? தாத்தா நல்லா இருக்காருன்னு பொய் சொன்னே?”

“ தாத்தா செத்துப் போனதைச் சொல்லி அவங்க மனசு கஷ்டபடவேண்டாமேன்னுதான் ..”

.என்று பாட்டி .சொன்னது தெளிவாகக் கேட்டது........

Thursday, November 21, 2024

தேடுனாலும் கிடைக்காது....

கல்லூரியில் படிக்கும் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் ஒரு காதல் கடிதம் வைக்கப்பட்ட புத்தகத்தை கொடுத்தான்.

அதில் அவன்...

"*நீ என்னை காதலிப்பதாக இருந்தால் நாளை நீ கல்லூரி வரும்போது சிவப்பு நிற ஆடை அணிந்து வரவேண்டும்" என்று எழுதியிருந்தான்.

மறுநாள் அவள் மஞ்சள் நிற ஆடையணிந்து கல்லூரிக்கு வந்து அவன் கொடுத்த புத்தகத்தை திருப்பிக் கொடுத்து விட்டு சென்றாள்

இதைப் பார்த்தவுடன் மிகவும் அவமானமடைந்த அவன் அதன் பின் அவளை பார்ப்பதை, நினைப்பதைக் கூட மறந்து போனான்.

வருடங்கள் உருண்டோடின.
அந்தப் பெண்ணிற்கும் திருமணம் ஆனது.

ஒரு நாள் அலமாரியை சுத்தம் செய்யும்போது அந்தப் பெண் திருப்பிக் கொடுத்த அந்த புத்தகம் கீழே விழ அதில் இருந்து ஒரு துண்டுச் சீட்டு.

அதில் இருந்த செய்தி

நானும் உங்களை காதலிக்கிறேன் ❤....


ஆனால் என்னிடம் சிவப்பு நிற ஆடை இல்லை... Sorry!!

நீதி: மாணவர்கள் கொஞ்ச காலத்திற்கு ஒருமுறையாவது புத்தகங்களை திறந்து பார்க்க வேண்டும்.

பின்குறிப்பு:

உடனே உங்களுடைய பழைய புத்தகங்கள் அனைத்தையும் கலைத்து தேடாதீர்கள்.

தேடுனாலும் கிடைக்காது....
 கண்டிப்பா இருக்காது...

நாமதான் எல்லாத்தையும் அப்பவே எடைக்கு போட்டு காசாக்கிருப்போமே !

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...