Total Pageviews

Friday, August 19, 2016

நல்ல மனிதர்கள், நல்ல ஒழுக்கம்

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று.

^ வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான்.

^ அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது.

^ புலி கரடியிடம் கூறிற்று:

-இவ்வேடன், 

நமது மிருக குலத்துக்கே பகைவன்;

இவனைக் கீழே தள்ளி விடு என்றது.

-இருக்கலாம் ஆனால், 

இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான்.

-சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று.

^^^ சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று: எனக்கு பசியாக இருக்கிறது.

^ நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், 

>>>நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

^ வேடன் கரடியைத் தள்ளிவிட்டான்,

>> கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது.

^^^அப்போது புலி கரடியிடம் சொன்னது. 

>>இந்த மனிதன் நன்றிகெட்டவன். 

சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற உன்னையே தள்ளிவிட்டான். 

-அவனை இப்பொழுதே தள்ளிவிடு என்றது.....

+ அதற்கு கரடி சொன்னது: 

எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக,,

+ நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. 

+ அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. 

+ வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

+ துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது 

சாதாரண மனிதர்களின் இயல்பு. 

+ நல்ல மனிதர்கள், நல்ல ஒழுக்கமான குணம் உள்ளவர்கள், அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்...

+ எந்த சூழ்நிலையிலும் எதுக்காகவும், யார் எப்படி நடந்தாலும், தன்னுடைய ஒழுக்கமான குணத்தை மாற்றி கொள்ள மாட்டார்கள்...

Thanks to C.Malathi

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...