Total Pageviews

Friday, February 17, 2012

காலை வைத்துக் கண்டுபிடி


புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.

மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.

தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.

பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும்.

இதுதான் தேர்வு" என்றார்.

ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.

பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.

அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.

"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.

தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்

சோம்பேறி விரும்பும் பெண்




பெரியவர் ஒருவர் ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தார். அங்கே ஒருவன் தூங்கி வழிந்தபடி ஆற்றில் தூண்டில் போட்டுக் கொண்டு இருந்தான்.
தூண்டில் தக்கை நீருக்குள் அமிழ்வதைக் கண்ட அவர், "உன் தூண்டிலில் மீன் சிக்கி உள்ளது. வெளியே இழு" என்றார்.

"ஐயா! நீங்களே அந்த மீனை வெளியே இழுத்து எனக்கு உதவி செய்யுங்கள்" என்றான் அவன்.

அவரும் தூண்டிலை இழுத்தார். அதில் பெரிய மீன் சிக்கி இருந்தது. "நல்ல பெரிய மீன்" என்றார் அவர்.

"ஐயா! தயவு செய்து தூண்டிலில் இருக்கும் அந்த மீனை எடுத்துப் பக்கத்தில் இருக்கும் கூடையில் போட்டு விடுங்கள்" என்றான் அவன்.
அவரும் அப்படியே செய்தார்.

"ஐயா! உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும். இங்கே இருக்கும் புழுவைத் தூண்டில் முள்ளில் கோர்த்துத் தண்ணீரில் போட்டு விட்டுச்
செல்லுங்கள்" என்றான்.

"மீண்டும் மீன் பிடிக்க நினைக்கிறாய். நல்லது. அப்படியே செய்கிறேன்" என்ற அவர் தூண்டில் முள்ளில் புழுவைக் கோர்த்து நீரில் போட்டு விட்டுக் கழியை அவன் கையில் கொடுத்தார்.

"நீங்கள் நல்லவர்" என்றான் அவன்.

"நான் பார்த்ததிலேயே பெரிய சோம்பேறி நீதான். யாரையாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றெடு. அந்த மகன் உன்னுடன் வருவான். தூண்டிலில் புழு கோர்ப்பது. மீனைக் கூடையில் போடுவது போன்ற எல்லா வேலைகளையும் செய்வான்" என்றார் அவர்.

"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.

மனைவியிடம் ஒப்புதல்



கலெக்டர் தேர்வில் இளைஞன் ஒருவன் தேர்ச்சி பெற்றிருப்பதைப் பணக்காரர் ஒருவர் அறிந்தார். பத்து வேலைக்காரர்களை அனுப்பி சொகுசுக் காரில் அந்த இளைஞனைத் தன் மாளிகைக்கு வரவழைத்தார்.

அரண்மனை போன்ற தன் மாளிகையைப் பெருமையுடன் அவனுக்குச் சுற்றிக் காட்டினார். அவருடன் நண்பர்களும் இருந்தனர்.

இளைஞனே! உன்னைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக உள்ளது. இந்தப் பகுதியிலேயே பெரிய பணக்காரன் நான். எனக்கு இருப்பது ஒரே மகள். அவள் அவ்வளவு அழகாக இருக்க மாட்டாள். அவளை உனக்கு திருமணம் செய்து வைத்து என் மருமகனாக்கிக் கொள்ள விரும்புகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார் அவர்.

மகிழ்ச்சியுடன் அவரை வணங்கிய அவன், ஏழையும் எளியவனுமான எனக்கு இவ்வளவு பெரிய நல்வாய்ப்பா? பேரும் புகழும் வாய்ந்த உங்கள் பரம்பரையில் பெண் எடுக்க நான் தவம் செய்திருக்க வேண்டும். என் வீட்டிற்குச் செல்ல அனுமதி தாருங்கள். இந்தத் திருமணத்திற்கு என் மனைவியிடம் ஒப்புதல் வாங்கி வந்து விடுகிறேன், என்றான்.

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...