Total Pageviews

Sunday, August 20, 2017

சந்தேகம் !

ஒரு மன்னரின் மகன் ஒரு முறை அரண்மனை உப்பரிகையில் நின்று காற்று வாங்கியபோது, அந்த வழியாகக் கடந்து போன ஒருவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனான்.


காரணம், அவன் தன்னைப் போலவே தோற்றத்தில் இருப்பதால்தான்.

 ரு வேளை அவனது தயார் இந்த அரண்மனையில் பணியாற்றி, தனது தந்தைக்கும் அந்தப் பெண்ணிற்கும் தவறான உறவு ஏற்பட்டு அதன் மூலம் இவன் பிறந்திருப்பானோ என்ற சந்தேகம் வரத் தொடங்கியது.

அவனை அரண்மனை ஊழியர்களைக் கொண்டு அழைத்து வந்து, தனது சந்தேகத்தைத் தீர்க்கும் முகமாக, “ ஏம்பா, உனது தாயார் இந்த அரண்மனையில் சிறிது காலம் வேலை பார்த்திருக்கிறாரா? “ என்று கேட்டான். 

 அதற்கு அவனோ, எனது தாயார் வேலை செய்யவில்லை. 

ஆனால் எனது தந்தை இந்த அரண்மனையில் சிலகாலம் பணியாற்றி இருக்கிறார் என்றானாம்.

 இப்படித்தான் சிலர் மற்றவர்களை குற்றம் கண்டுபிடிக்கவும், மட்டம் தட்டவும் துடியாய் துடிக்கிறார்கள்.

 உண்மை நிலை வேறு என்று வரும்போது, ஓடிவிடுகிறார்கள்.

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...