Total Pageviews

Friday, February 26, 2016

எனக்கு ஒரு பெண் பிறந்து விட்டாள் !

புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியரிடையே ஒரு ஒப்பந்தம்.

இன்று யார் வீட்டிற்கு வந்தாலும் கதவைத் திறக்க கூடாது என்று.

சிறிது நேரத்திலேயே கணவனின் பெற்றோர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு கதவைத் தட்டினர். கணவனுக்கு கதவைத் திறந்து விட வேண்டும் என்று மனதிற்குள் ஆசை. ஆனால் அக்ரிமென்ட் நினைவிற்கு வந்ததால் போகவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து அவர்கள் சென்று விட்டார்கள்.

சில மணிநேரம் கழித்து வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை. இப்போது மனைவியின் பெற்றோர்கள் வாசலில். மனைவியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. என்னால் முடியாதுங்க என கண்ணீரைத் துடைத்து கொண்டு சென்று கதவைத் திறந்தாள் மனைவி. கணவன் எதுவும் சொல்லவில்லை.

வருடங்கள் உருண்டோடின. இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அதைத் தொடர்ந்து ஒரு பெண் குழந்தை பிறந்தாள். கணவன் மிகவும் செலவு செய்து மகள் பிறந்த சந்தோசத்தை கொண்டாடினான். மனைவிக்கோ மிகுந்த ஆச்சரியம். கணவனிடம் கேட்டே விட்டாள். என்னங்க, முதலில் பிறந்த இரண்டு மகன்களுக்கும் இந்த அளவிற்கு கொண்டாட்டம் இல்லை. பொண்ணு பிறந்ததற்கு மட்டும் என்ன இவ்வளவு மகிழ்ச்சி.

கணவனின் கண்களில் லேசான கண்ணீர். எனது வயதான காலத்தில் வீட்டுக்கதவை திறந்து விட எனக்கு ஒரு பெண் பிறந்து விட்டாள் என்றான் கர்வத்துடன். 

Tuesday, February 23, 2016

பச்சை !

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். 

அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது.
பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார்.
அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்.
அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான்.

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். 

தலைவலி குணமாகி விட்டது. 

சன்னியாசி கூறியது சரிதான். 

உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான்.
வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே!

நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள்.
சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார்.

பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான்.

“இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார்.

“ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான்.

“மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம்.
ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி😎 வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. 

உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். 

நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். 

அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...