Total Pageviews

Sunday, January 19, 2014

நிலவும் சாட்சி சொல்லும் !






மாடசாமிக்கும் கந்தசாமிக்கும் அடுத்தடுத்து நிலங்கள் இருந்தன.
இதில் மாடசாமிதான் அடிக்கடி தகராறு செய்து வந்தான்.

ஓர் இரவு நேரம்.  நல்ல  பௌர்ணமி. இவர்கள்  இருவரும்  தங்கள் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர்.

வழக்கம் போலவே தகராறு.

மாடசாமி, தன்கையில் இருந்த மண்வெட்டியால் கந்தாசாமியை வெட்டி விடுகிறான்

கந்தசாமி சாகும்போது, "நிலவே நீ தான் சாட்சி" என சொல்லி விட்டு சாகிறான்.

அடபோடா இந்த நிலவா வந்து சாட்சி சொல்லபோகிறது என்று சிரித்தான்.

கந்த சாமியை யார் கொன்றது எனத்தெரியாமல் போகிறது.

சிலகாலம் போனது.

மாடசாமி இரவு சாப்பிட்டு விட்டு கைற்றுக்கட்டிலை வெளியே எடுத்துபோட்டு படுத்தான்.

அன்றும் பௌர்ணமி.
அவனுக்கு கந்தசாமியின் ஞாபகம் வந்து போனது.
பெரிதாக சிரித்தான்.

திடிரென்று தன்புருசன் சத்தம் போட்டு சிரித்ததை கண்டு காரணம் கேட்டாள் அவன் மனைவி.

இவனும் ஏதோதோ சொல்லி சமாளித்து பார்த்தான்.

அவள் சமாதானம் அடையவில்லை.

சரி யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி, கந்தசாமியை தான் கொன்ற கதையை சொன்னான்.

சில நாட்கள் சென்றன.

மாடசாமிக்கும் அவன் மனைவிக்கும் சண்டை.

அவளை அடிஅடின்னு அடித்தான்.
கோபம் தலைக்கேறி மண்வெட்டியை எடுத்து வெட்ட வந்தான்.

அவள் பெரிதாக சத்தம் போட்டுக்கொண்டே தெருவில் வந்து கத்தினாள்.

"
அய்யோ என்ன காப்பாத்துங்க. அன்னைக்கு கந்தசாமிய கொன்னமாதிரி என்னையும் கொல்ல வரான் என் புருசன்"

அப்பத்தான் கந்தசாமிய கொன்றது மாடசாமிதான்னு ஊர்மக்களுக்கு தெரிந்தது.

‪‎
பெண்களிடம் ரகசியம் தங்காது என்பது உண்மையா ?





உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...