Total Pageviews

Thursday, May 23, 2013

இளவரசி புனிதவள்ளி

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு புனித வள்ளி என்ற அழகு தேவதை ஒருத்தி மகளாக இருந்தாள்.

அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க  ஜோதிட வித்வான் ம்ற்றும் சகல கலைகளும் அறிந்த பண்டித வித்வான் ராஜசிம்மனை ஆசிரியராக நியமித்தார் மன்னர். அந்த ராஜசிம்மனுக்கு தன்னிடம் கல்வி கற்க்கும் இளவரசி புனிதவள்ளி மேல நாட்டம். தன் விருப்பத்தைத் இளவரசி புனித வள்ளியிடம் தெரிவித்தான்  ராஜசிம்மன். இளவரசி புனிதவ்ள்ளி மறுத்தாள்.

இளவரசி புனித வள்ளியை அடைந்தே தீர வேண்டும் என  எண்ணிய ராஜசிம்மன் என்ன செய்தான் தெரியுமா?

மன்னா உங்கள் மகள் புனித வள்ளி ஜாதகத்தில் கட்டம் சரிய்ல்லை. அவளால் உனக்கும் இந்த நாட்டுக்கும் ஆபத்து. இதிலேயிருந்து நீங்களும் நாடும் தப்பிக்கவேண்டுமானால் புனித வள்ளியை ஒரு பொட்டியில வைத்து ஆற்றில் விட்டுவிடு என்றான் ராஜசிம்மன்.

இதை நம்பிய மன்னனும் அப்படியே செய்துட்டான். பெட்டி ஆற்றில் மிதந்துகொண்டே வந்தது. காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்த பக்கத்து நாட்டு  இளவரசன் அந்தப் பொட்டியப் பாத்து, எடுத்து திறந்து பாத்தான். அதில் புனித வள்ளி மயங்கிய நிலையில் இருந்தாள். அவளிடம் கேட்டு உண்மையைத் தெரிந்துகொண்டான் இளவரசன்

பின்னர் அவளைத் திருமணம் செய்துகொண்டான். பின்னர் அவன் வேட்டையாடிய புலியைப் பெட்டியில அடைத்து ஆற்றில் விட்டான். காட்டில் காத்துக்கொண்டிருந்த ஆசிரியர் ராஜசிம்மன் பெட்டியை கொண்டுபோய் ஒரு வீட்டில் வைத்தான். நல்லா அலங்காரம் செய்துவிட்டு கதவை சாத்தி தாழ்பாள் போட்டான். கனவுலகில் சன்சரித்தான். இராசா மகளை அனுபவிக்கப் போகின்ற ஆசையில் பெட்டியைத் திறந்தான். அடிபட்டுக் கிடந்த புலி ராஜசிம்மன் மேல் பாய்ந்து கொன்றது.“

கதையின் நீதீ

ஆசிரியர் தொழில் புனிதமானது. அத்தொழிலுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தப்பு செய்ய நினைப்பவன் அழிவான்

உலக்கை சாமியார்

“ஒரு கிராமத்தில் தாமோதரன்  என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு  தினமும் ஒரு சாமியாரை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போட்டால்,  கடவுளே  வீட்டிற்க்கு வந்து  சாப்பிட்டு சென்றதாக உணர்வுவான்.  சாமியார் யாராவது ஒருவர் தனது வீட்டில் சாப்பிட்ட பின்னர்தான் அவன் சாப்பிடுவான். இது அவன் மனைவிக்குப் பிடிக்கவில்லை. இதைத் தடுத்து நிறுத்த நினைத்தாள்.

 ஒரு நாள் ஒரு சாமியாரை அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு சாப்பிட இலை வாங்கப் போனான். சாமியார் விருந்தை எதிர்பார்த்து ஆசையோடு உட்கார்ந்திருந்தார். தாமோதரனின் மனைவி வீட்டில் இருந்த நெல்லு குத்துகிற உலக்கையைக் கழுவி, விபூதி பூசி, மாலை போட்டு சாமியாரு பார்வையில் படுகிற மாதிரி வைத்தாள். சாமியாருக்குப் புரியவில்லை. ‘உலக்கைக்கு ஏன் மாலை போட்டு வைத்திருக்கிறாய்’ என்று கேட்டார்.

‘எங்கள் வீட்டுக்காரர் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா’ என்று அவள் கேட்டாள். சாமியார் ‘இல்லை’ என்று சொன்னார்., அவள் உடனே முகத்தை சோகமா வைத்துக்கொண்டு ‘எங்க வீட்டுக்காரர் தினம் ஒரு சாமியாரை அழைத்துக்கொண்டு வந்து வயிறார சாப்பாடு போட்டு, இந்த உலக்கையால் நன்கு அடித்து அனுப்புவார்; அவருக்கு அப்படியொரு வேண்டுதல்’ என்றாள்.

இதைக் கேட்ட சாமியார் மெதுவாக நழுவி வீட்டை விட்டுப் போயிட்டார். அப்பொழுது அவள் வீட்டுக்காரன் தாமோதரன் வீட்டுக்கு வந்தான். சாமியாரைக் காணோம். மனைவியைக் கூப்பிட்டு சாமியார் எங்கே என்று கேட்டான். ‘சாமியார் இந்த உலக்கையை கேட்டார். உங்கள் அம்மா வைத்திருந்த உலக்கையாச்சே, நான் தரமுடியாது என்று சொன்னேன். அவர் கோபித்துக்கொண்டு இப்பொழுதான் போனார்’ என்று சொன்னாள்.

 ‘சாமியார் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே! உலக்கயைக் கொடு’ என்று உலக்கையை கையில் எடுத்துக்கொண்டு சாமியாரை நோக்கி ஒடினான். இவன் உலக்கையோட வருவதைப் பார்த்த சாமியார் தன்னை அடிக்க வருவதாக நினைத்து பள்ளம் மேடு, குண்டு, குழி, முள், பாராமல் குதித்து ஓடினார். அவருக்கு எப்படியாவது உலக்கையை கொடுத்துவிட எண்ணி தாமோதரன் துரத்த, சாமியார் ஓடியே போயிட்டார்”.

கதையீன் நீதி

உழைத்து வாழ் வேண்டும் பிறர்  உழைப்பில் வாழ்ந்திடாதே!

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...