Total Pageviews

Friday, March 29, 2013

நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு சில வேளைகளில் பலமாக அமைந்து விடுகிறது



இளைஞர் ஒருவர் வண்டியை ஓட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகிக் கால்கள் இரண்டையும் இழந்தார்.

அவருக்கு மரக்கால்கள் பொருத்தப்பட்டன.

அவர் ஒருமுறை ஆப்பிரிக்காவிற்குச் சென்றார்.

அங்குள்ள காட்டுவாசிகள் சிலர் அவரைக் கடத்திச் சென்றனர்.

அந்த காட்டுவாசிகளின் தலைவன், “இன்று நமக்கு நல்ல இளைஞன் ஒருவன் உணவாகக் கிடைத்திருக்கிறான். இவனுடைய மாமிசத்தை உண்டு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்கு முன்னாதாக இவன் கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என்றான்.

தலைவன் உத்தரவைக் கேட்ட காட்டுவாசிகள் அந்த இளைஞனை நெருங்கினர்.

அவர்கள் இளைஞனின் கால்களை வெட்ட முயன்ற போது, அந்தக் கால்கள் கடினமான வேறு பொருளாக இருப்பதைப் பார்த்தனர். கால்கள் மரக்கட்டையாக இருப்பது அவர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. அவர்கள் பயந்து போனார்கள்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் தலைவனிடம் கால்கள் மரக்கட்டைகளாக இருப்பதைப் பற்றிச் சொன்னார்கள்.

தலைவனும் அந்த இளைஞனின் கால்களைப் பார்த்தான். அதைப் பார்த்த அவனுக்கும் பயம் உண்டானது.

தலைவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “நீங்கள் கடத்தி வந்திருக்கும் இந்த இளைஞன் மனிதனல்ல, கடவுளாகத்தானிருப்பான். இவரை வெட்ட வேண்டாம். அவரை விடுவித்து விடுங்கள்” என்றான்.

அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான். அவனிடம் அவர்கள் ஆசி பெற்றுக் கொண்டனர்.

தப்பி வந்த இளைஞன், “நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு சில வேளைகளில் பலமாக அமைந்து விடுகிறது. கடவுள் நமக்கு எப்போதும் தீமை செய்வதில்லை” என்றான்.

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...