Total Pageviews

Friday, March 29, 2013

தர்மத்துக்கு என் சொத்து




ஒரு ஊரில் மிகப் பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் மிகவும் கருமியாக கஞ்சத்தனத்துடன் வாழ்ந்து வந்தார்.

அந்த ஊரில் நடைபெறும் கோவில் சீரமைப்பு, பள்ளிக் கட்டடம் கட்டுதல், கிராம மேம்பாடு போன்ற பல நல்ல செயல்பாடுகளுக்காக ஊர் பொதுமக்கள் பலமுறை போய் கேட்டும் ஒரு பைசா கூட கொடுக்காதவர்.

தீடிரென படுக்கையில் விழுந்தவர் சாகும் தருவாயை அடைந்தார். உடனே ஊர் பொதுமக்களை அழைத்து "எனக்குப் பிறகு எனது சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கே!" என்றார்.

ஊர் மக்களுக்கெல்லாம் அதிர்ச்சி, ஆச்சரியம்.

உடனே அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர் செல்வந்தரிடம், "ஐயா! உங்கள் சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கு தர ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி! இந்த சொத்துக்களை கல்வி வளர்ச்சிக்காக உபயோகிக்கலாமா? அல்லது மருத்துவமனை கட்ட உபயோகிக்கலாமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர் "அட நீங்க ஒண்ணு, இந்த சொத்துக்கள் அனைத்தும் எனது மனைவி தருமம் என்கிற தருமாம்பாளுக்கே சொந்தம்” என சொன்னாராம்.

நல்ல டாக்டரைப் பார்க்க...







சுவாமி தயானந்த சரஸ்வதி ஒருமுறை இந்தக் கதையைச் சொன்னார்.

சாகப் போகும் நிலையிலிருந்த மூன்று பேரிடம் டாக்டர் "அவர்களுடைய கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார்.

அதற்கு முதலாமவன் சொன்னான், "தான் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் மன்னிப்புக் கேட்க விரும்புவதாக"

இரண்டாவதாக இருந்தவர் "தன்னுடைய குடும்பத்தவர்க்ள் அனைவரையும் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.

மூன்றாவது ஆளோ நான் வேறு ஒரு நல்ல டாக்டரைப் பார்க்க விரும்புகிறேன்" என்று சொன்னார்.

நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு சில வேளைகளில் பலமாக அமைந்து விடுகிறது



இளைஞர் ஒருவர் வண்டியை ஓட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகிக் கால்கள் இரண்டையும் இழந்தார்.

அவருக்கு மரக்கால்கள் பொருத்தப்பட்டன.

அவர் ஒருமுறை ஆப்பிரிக்காவிற்குச் சென்றார்.

அங்குள்ள காட்டுவாசிகள் சிலர் அவரைக் கடத்திச் சென்றனர்.

அந்த காட்டுவாசிகளின் தலைவன், “இன்று நமக்கு நல்ல இளைஞன் ஒருவன் உணவாகக் கிடைத்திருக்கிறான். இவனுடைய மாமிசத்தை உண்டு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்கு முன்னாதாக இவன் கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என்றான்.

தலைவன் உத்தரவைக் கேட்ட காட்டுவாசிகள் அந்த இளைஞனை நெருங்கினர்.

அவர்கள் இளைஞனின் கால்களை வெட்ட முயன்ற போது, அந்தக் கால்கள் கடினமான வேறு பொருளாக இருப்பதைப் பார்த்தனர். கால்கள் மரக்கட்டையாக இருப்பது அவர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. அவர்கள் பயந்து போனார்கள்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் தலைவனிடம் கால்கள் மரக்கட்டைகளாக இருப்பதைப் பற்றிச் சொன்னார்கள்.

தலைவனும் அந்த இளைஞனின் கால்களைப் பார்த்தான். அதைப் பார்த்த அவனுக்கும் பயம் உண்டானது.

தலைவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “நீங்கள் கடத்தி வந்திருக்கும் இந்த இளைஞன் மனிதனல்ல, கடவுளாகத்தானிருப்பான். இவரை வெட்ட வேண்டாம். அவரை விடுவித்து விடுங்கள்” என்றான்.

அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான். அவனிடம் அவர்கள் ஆசி பெற்றுக் கொண்டனர்.

தப்பி வந்த இளைஞன், “நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு சில வேளைகளில் பலமாக அமைந்து விடுகிறது. கடவுள் நமக்கு எப்போதும் தீமை செய்வதில்லை” என்றான்.

வெற்றியின் ரகசியம்


ஒரு குறுநில மன்னனுக்கும் பேரரசன் ஒருவனுக்கும் போர்.

பேரரசனிடம் படை பலம் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு வலிமையும் இருந்தது.

குறுநில மன்னனின் போர் வீரர்கள் வீரமுடையவர்கள் என்றாலும் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால், மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள்.

குறுநில மன்னன் தன் வீரர்களை அழைத்தான்.

‘‘இந்தப் போர் நமக்கு முக்கியமான ஒன்று. இதில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆனால், படை பலம் குறைவாக இருக்கிறது. கடவுள் நம் பக்கம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். கடவுள் நம்முடன் இருக்கிறாரா என்பதை அறிய இந்தக் காசை சுண்டி விடுகிறேன். தலை விழுந்தால் கடவுள் நம் பக்கம். பூ விழுந்தால் போரில் தோற்று விடுவோம்’’ என்று காசைச் சுண்டினான்.

தலை விழுந்தது. வீரர்களுக்கு உற்சாகமடைந்தனர்.

அவர்களுக்குள் கடவுளே நம்முடன் இருக்கிறார் என்ற எண்ணம் நிறைந்தது.

கடவுள் துணையுடன் வீரத்துடனும் தீரத்துடனும் போரிட்டார்கள். வென்றுவிட்டார்கள்.

தளபதி வந்தார்.

‘‘மன்னா கடவுள் நம்முடன் இருந்ததால் நாம் ஜெயித்து விட்டோம்’’ என்று உற்சாகமாய்ப் பேசினார்.

‘‘தளபதி நீங்கள் சொல்வது போல் இல்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம் நம்பிக்கையாலும், நம்முடைய மன பலத்தாலும்தான் ஜெயித்து விட்டோம்’’ என்று அவன் சுண்டிவிட்ட நாணயத்தை எடுத்துக் காட்டினான்.

அதில் இருபுறமும் தலைதான் இருந்தது.

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...