Total Pageviews

Wednesday, February 20, 2013

தன்னம்பிக்கை

இளைஞன்  ஒருவன்  பட்டப்படிப்பு   படித்து முடித்து  விட்டு

வேலைத் தேடி அலைகிறான்.  ஏற்கனவே நிறைய வேலையில் சேர்ந்து,    ஒத்து வராமல் ஒரு  வேலை விட்டு இன்னொரு  வேலை என்று தாவிக் கொண்டேயிருக்கிறான்.

காரணம்  வேலை  பிடிப்பதில்லை. (உண்மையில்,  வேலையில்  பிடிப்பில்லாமை,,  தன்னம்பிக்கை   இல்லாமை......இப்படி  ' இல்லாமை '  தான் நிறைய.....)

ஒரு நண்பனின் உதவியுடன்  ஒரு பத்திரிகையில்   நிருபராக  சேர்கிறான்.

சேர்ந்தவுடன், அந்தநாட்டின்  சுதந்திர தினம்   வருகிறது.இந்த இளைஞனிற்கு
அந்நாட்டின்   முக்கிய  அலுவலகத்தில்  நடக்கும் சுதந்திர விழாவைப்  பற்றிய   அறிக்கை   சமர்ப்பிக்க   வேண்டிய   பொறுப்பு   அளிக்கப்படுகிறது.

இது அவனுடைய  முதல்  சந்தர்ப்பம்.மிக சிறப்பாக  செய்ய   வேண்டும்.  இந்த வேலையிலாவது   நிலைக்க வேண்டும்  என்பது  அவனுடைய  விருப்பம்.

அதனால் இந்த சந்தர்ப்பம்   தனக்கு கிடைத்தது   அதிர்ஷ்டம்  என்று நினைக்கிறான்.எடுத்தவுடனே  எவ்வளவு பெரிய பொறுப்பு ?

 உற்சாகத்துடனேயே      சென்று   ,நிகழ்ச்சி   தொடங்க   காத்திருக்கிறான்.

நேரம்  ஆகிக் கொண்டேயிருக்கிறது.   விழா ஆரம்பித்த பாடில்லை.  தேசியக்  கொடி,     இன்னும்  ஏற்றப்படவில்லை.

சிறிது நேரம்  கழித்து , ஒரே  சலசலப்பு.   என்னவென்று   புரியவில்லை.  ஒவ்வொருவராய்  அரங்கை  விட்டு சென்று கொண்டிருந்த்தார்கள்  .ஒருவரிடமும் சரியான பதில் இல்லை.

வெகு நேரக்   காத்திருப்புக்கு பின்னர் இன்று விழா நடக்கும்   போல்  தெரியவில்லை.

அவனுடைய  உற்சாகம்  அனைத்தும்   ஆற்று  நீராய்  வடிந்தது.  கொஞ்சமாய்  ஊற்றெடுத்திருந்த.....   நம்பிக்கை   சொல்லாமல் கொள்ளாமல்  விடை பெற்றது.

நம் இளைஞன்  தன்  விதியை நொந்து  கொண்டே   பயங்கர சோகத்துடன்  ஆபீஸ்  செல்கிறான்.நடந்ததை   சொல்கிறான்.

அவனுடைய உயரதிகாரி  அவனை கோபித்துக் கொள்கிறார். எவ்வளவு  அருமையான   சந்தர்ப்பம் ? தவற விட்டு வந்து நிற்கிறாய். எத்தனை விஷயங்கள்.மிஸ்  பண்ணிஇருக்கிறோம்  தெரியுமா?.  யாரிடமாவது, நான்   'press ' என்று  சொல்லிக் கேட்டிருந்தால்    ஒரு முழு  பக்கமே நிரம்பும்   அளவிற்கு    செய்தி கிடைத்திருக்குமே ? கோட்டை  விட்டு விட்டாயே  என்று  வேலையை விட்டு  நீக்குகிறார்.

தன்னுடைய   எதிர்மறை  சிந்தனையால்,  ....மீண்டும் வேலைத்  தேடி அலைவதாக  முடிகிறது  கதை.

விவேகானந்தரின்   150 வது பிறந்த வருடம் கொண்டாடுகிறோம்.விவேகானந்தர் என்ற பெயர்  காதில் விழுந்ததுமே   ஒரு தன்னம்பிக்கை   ஊற்று   நம் எல்லோருக்குள்ளும்    கிளம்புவதை   யாருமே  மறுக்க மாட்டார்கள்.

ஆனால் அவரிடமிருந்த   தன்னம்பிக்கையில்  சிறிதாவது    நமக்கு   யாருக்காவது  இருக்கிறதா?  தெரியவில்லை.

(இல்லை  என்று   சொல்லும் தைரியம்  கூட  இல்லை  என்று தான் சொல்ல வேண்டும் )

தன்னம்பிக்கை   விடுங்கள்.  , தன்னிரக்கம், எதிர்மறை  சிந்தனை  இதெல்லாம் இல்லாமல்,   எத்தனை   பேர்  இருக்கிறோம். ?

  பஸ்   நிலையத்தில்  ஒருவர் அன்று  சொல்லிக் கொண்டிருக்கிறார்."என் அதிர்ஷ்டம்  பற்றி உங்களுக்குத் தெரியாது சார்.  நான் உப்பு  விற்கப்  போனால்  மழை பெய்யும்.  மாவு விற்கப் போனால்  காற்றடிக்கும். பஸ்   கிடைக்காததற்கே    இப்படி என்றால்  மற்ற விஷயங்களில்.........

இந்த எதிர்மறை   சிந்தனை இல்லாமல்  இருந்தாலே நலமாயிருக்கும்.

  நம்  குழந்தைகளுக்கு    சாதத்துடன்   தன்னம்பிக்கையை   ஊட்டி  வளர்ப்போம்

தன்னிரக்கத்தை,எதிர்மறை  சிந்தனையை       இரக்கமின்றி    விரட்டி அடிக்கக்  கற்றுக் கொடுப்போம்.

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...