Total Pageviews

Tuesday, December 31, 2013

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.



ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது,   புத்தியில்லாத செயல்.

25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...?

 
ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...

முதல் தாத்தா : எனக்கு மது, புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !

ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !

மூணாவது தாத்தா : எனக்கு மது, புகை, பொண்ணுக சகவாசம்னு எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25

நிருபர் : ?????????

சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும் இளைஞர்களே, 25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...?

இந்த மொபைல் போன் யாரோடது...?


ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..

டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது..

எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு 'ஹலோ' சொன்னான்..

'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'

'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'

'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'

'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'

'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'

'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...

'என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்றா நீ சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்...

ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம்
விசாரித்து கொண்டிருந்தான்,'

எக்ஸ்கிஸ் மி சார்..

இந்த மொபைல் போன் யாரோடது...?

மூளை இருக்கா ????????


ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி.

ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.

இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.

நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நண்பனும் கூறினான்.

கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று வழக்கம் போலக் கேட்டான்.

அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை என்றான்.

திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த,
கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.

Wednesday, December 25, 2013

ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்



“கையில் என்ன ‌பொட்டலம்?”

“மல்லிகை பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்…!”

“அவ்வளவு பிரியமா உங்களுக்கு?”

“ஆமா சார்… என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதா‌னே காரணம்!”

“உங்க வெற்றிக்கு மட்டுமா… ‌அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவருக்குப் படிக்கச் சொல்லிக் கொடுத்து… அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியாக ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே..!”

“அப்படியா?”

“மோட்டார் மன்னர் யென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரைப் பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!”

“‌அய்யோ பாவம்!”

“அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க… மனசு சோர்ந்து போயி்டாதீங்க… நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க… அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு… அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டுபிடிச்சார்..!”

“பார்த்தீங்களா? ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்-ன்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!”

“சரி… இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன?”

“அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்..!”

“இதுக்கு உங்க மனைவி ரொம்ப உதவி பண்ணாங்களா..?”

“ஆமாங்க”

“எப்படி?”

“அதை  நான் எழுதி முடிக்கிறவரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்குப் போயிருந்தாசார் !”

நன்றி : தென்கச்சி கோ. சுவாமிநாதன்

தேடி சென்றால் ஏமாற்றம்....நாடி வந்தால் சந்தோசம்..

 
ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்...
...
தேடி சென்றால் ஏமாற்றம்....நாடி வந்தால் சந்தோசம்..

பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள்



தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச்சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான்.

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.

மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.

முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.

அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.

இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.

பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!

பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..

''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.

தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.

1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.

2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.

3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.

4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.

5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.

பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.

நன்றி: தன்னம்பிக்கை கதைகள்

Thursday, November 21, 2013

ஆத்திரம்



ஒரு கிராமத்தில் ஓருவன், அழகிய புள்ளிமான் ஒன்றை, தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான், காணாமல் போய்விட்டது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத, அவன், அந்த மானை பிடித்து போயிருப்பவனை, பழிவாங்க துடித்தான்; கடவுளிடம் முறையிட்டான்.

கடவுளும் வந்தார். அவரிடம்,  தான் ஆசையாய் வளர்த்த, மானை தாருங்கள், என்று தானே கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கேட்கவில்லை. ஆத்திரத்தில், 'நான் ஆசையாய் வளர்த்த மானை, யாரோ அபகரித்து சென்று விட்டனர். அந்த மானை திருடியவன், யாராக இருந்தாலும், அவனை என் முன் நிறுத்த வேண்டும்' என, கேட்டான்.

அதற்கு கடவுள், 'பக்தா, மானை நான் உனக்கு திருப்பித் தருகிறேன்.

ஆனால், மான் காணாமல் போனதற்கு, காரணமானவர் யார் என்று கேட்காதே' என்றார்.

அதை ஏற்க மறுத்த மனிதன், 'கடவுளே, நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை, பழி வாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை, இங்கு வரவழைக்க வேண்டும்' எனப் பிடிவாதமாக கேட்டான்.

அதை கேட்ட கடவுள், 'சரி, நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது' என்றார். அந்த மனிதனும், சரி என்றான்.

'தந்தேன் நீ கேட்ட வரத்தை... இந்த மானை திருடிச் சென்றவர், உன் பின்னால் நிற்கிறார்' என, அந்த மனிதனிடம் கூறினார் கடவுள். 'கடவுளே காப்பாற்று' உடனே, அந்த மனிதன் திரும்பி பார்த்தான். மிகப்பெரிய சிங்கம் அங்கு நின்று கொண்டிருந்தது. அதை பார்த்ததும், பழி வாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. 'கடவுளே காப்பாற்று' என, அலறி அடித்தபடி ஓடினான்.

இந்தக் கதையில் வரும் பக்தனுக்கு, அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது; அது அழிவை தந்தது. எனவே, கோபத்தை தவிருங்கள்; அன்புடன், அமைதியுடன் வாழுங்கள்.

வெங்காய வியாபாரி


ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில், தரை துடைக்கும் பணியாளராக, ஒருவர் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்திற்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணிபுரியும், அனைவரின் இ மெயில் முகவரியை கேட்டார். கம்ப்யூட்டர் குறித்து, எதுவும் தெரியாத, தரை துடைக்கும் பணியாளருக்கு, இ மெயில் முகவரி கிடையாது. அதை மேலாளரிடம் தெரிவித்தார். "கம்ப்யூட்டர் நிறுவனத்தில், வேலை பார்ப்பவருக்கு, இ மெயில் இல்லை என்றால் எப்படி?' எனக் கூறி, அந்தப் பணியாளரை, மேலாளர் வேலையில் இருந்து நீக்கினார்.

வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. தன் சேமிப்பில் இருந்த, 1,000 ரூபாயைக் கொண்டு, சந்தையில், வெங்காயம் வாங்கினார். அதை குடியிருப்பு பகுதிகளுக்கு, எடுத்துச் சென்று, கூவி கூவி விற்றார். சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியானார்.

இச்சூழ்நிலையில், ஒரு வங்கியில், கணக்கு துவக்குவது தொடர்பாக, வங்கி ஊழியர், அந்த வியாபாரியை சந்தித்தார். கணக்கு துவக்குவதற்கான விவரங்களை, படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ மெயில் முகவரியை எழுதுவதற்காக, முகவரியை கேட்டார்.அதற்கு, அந்த மனிதர், "எனக்கு கம்ப்யூட்டர் குறித்து எதுவும் தெரியாது. எனவே, இ மெயில் முகவரி இல்லை' எனப் பதில் அளித்தார். உடனே, அந்த வங்கி ஊழியர், 'இ மெயில் இல்லாமலே, இந்த அளவு முன்னேறி இருக்கிறீர்கள். உங்களுக்கு, கம்ப்யூட்டர், இ மெயில், இன்டர்நெட் குறித்து தெரிந்திருந்தால், எந்த அளவு முன்னேறி இருப்பீர்கள்?' என, ஆச்சரியமாக கேட்டார்.

அதற்கு அந்த வெங்காய வியாபாரி, "அது தெரிந்திருந்தால், ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில், தரை துடைத்துக் கொண்டிருப்பேன்' என்றார்.எனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது, வருத்தப்படாதீர்; முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும்

புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன?




ஓர் ஊரில் ஒரு பணக்கார இளைஞர் இருந்தார். ஒரு நாள் அவர் தனது நண்பர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய மனைவி வந்து வாருங்கள் பழையது சாப்பிடலாம் என்று கணவரை அழைத்தார்.

இதேபோல் பலமுறை பத்துப் பேருக்கு முன்பாக பழையது சாப்பிடலாம் என்று மனைவி கூறி வந்தது அந்த இளைஞருக்கு வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.

மற்றொரு நாள் வழக்கம் போல், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞரை பழையது சாப்பிடலாம் என்று மனைவி அழைத்தவுடன் சற்றுக் கோபமாக எழுந்து உள்ளே சென்றார். வகை வகையான பதார்த்தங்கள் இலையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அப்பெண் சுடச்சுட சோற்றைப் பரிமாறினார்.

உடனே அந்த இளைஞர் கேட்டார். எப்போது பார்த்தாலும் நான்கு பேருக்கு மத்தியிலே பழையது சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுகிறாயே, இங்கே என்ன பழைய சோறா போடுகிறாய்? நெய், வடை, பாயாசத்தோடு சுடு சோறல்லவா போடுகிறாய்?

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். கஞ்சப்பிரபு என்றல்லவா எண்ணுவார்கள்? என்று அவர் கூறியவுடன் மனைவி, நீங்கள் சுடச்சுட புதிதாக ஏதாவது சம்பாதிக்கிறீர்களா என்ன?

உங்கள் அப்பா சம்பாதித்து வைத்துவிட்டுப் போன பழைய சொத்தை வைத்துக் கொண்டுதானே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலளித்தார். 


கலைவாணர் , நான் சம்பாதித்த பழையதைக் கொண்டிருக்க வேண்டுமா?

அவர்களே உழைத்துச் சுடுசோறு சாப்பிடட்டுமே! 

அவர் சொன்னதுபோல் தம் வாரிசுகளுக்குச் சொத்துக்களை அல்லது பணத்தைச் சேமித்து வைத்துவிட்டுப் போகவில்லை. 

அவருடைய பிள்ளைகள் பழையது சாப்பிடாமல் உழைத்து கௌரவமாக வாழ்கிறார்கள்.
 

Monday, November 11, 2013

சகிப்புத்தன்மை இருந்தால் தான் நிரந்தர வெற்றி கிட்டும் !



நவம்பர் 16 சர்வதேச சகிப்புத் தன்மை தினம். உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வேண்டும்

உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வேண்டும் என்பதற்காக யுனெஸ்கோ அமைப்பால் கடந்த 1995 ஆம் ஆண்டு உருவக்கப்பட்டதுதான், உலக சகிப்புத் தன்மை தினம் (International Day for Tolerance, November 16).

இந்தத் தினத்தில் மக்களிடையே சகிப்பு உணர்வு இல்லாததால் ஏற்படும் மோசமான விளைவுகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. கூடவே, சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் உலக அளவில் நடந்த நல்ல சம்பவங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

குடும்பம் தொடங்கி நாடு வரையில் அனைத்து இடங்களிலும் சகிப்பு தன்மையுடன் நடந்துக் கொண்டால் அரிய பல காரணங்களை சாதிக்க முடியும். அதற்கு சிறந்த உதாரணம், நம் தேசப் பிதா மகாத்மா காந்தி சகிப்பு தன்மை மற்றும் அகிம்சையுடன் நடந்துக் கொண்டதால்தான் நாடு சுதந்திரம் பெற முடிந்தது.

சகிப்புத்தன்மைக்காக ஒரு சிறிய கதை

முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரில் உள்ள முரடன் ஒருவன், உணவகத்திற்குள் வந்தான். அவனை பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் ஓடிவிட்டார்கள். முல்லா இதை கவனித்தார். இருந்தாலும், அந்த முரடனை பார்த்து பயப்படாமல் சாப்பிட்டுகொண்டிருந்தார். முல்லாவின் அருகில் வந்த முரடன், முல்லாவின் தலைபாகையை தட்டிவிட்டு சென்றான்.

இப்படி ஒருமுறை அல்ல. ஒவ்வோரு நாளும் முல்லா வழக்கமாக அந்த உணவகத்திற்கு சாப்பிட வரும்போதெல்லாம், அந்த முரடன் வந்து முல்லாவின் தலைபாகையை தட்டிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான். 

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் முல்லாவிடம் வந்து, “உங்களுக்கு இந்நாட்டு அரசர் நண்பராயிற்றே. இந்த முரடனை பற்றி மன்னரிடம் சொன்னால் எல்லோருக்கும் நிம்மதியல்லவா?” என்றார்கள்.

அதற்கு முல்லா, “அந்த முரடனிடம் விரோதம் எதற்கு?. ஒருவேளை அவன் தண்டனையிலிருந்து விடுதலை ஆன உடன், நான் அவனுக்கு எதிரியாக தெரிவேன். எனது வேலை அவனுடன் மோதி கொண்டிருப்பதல்ல.” என்றார்.

“அப்படி என்றால் இந்த முரடனின் செயல்களுக்கு முற்றுபுள்ளி எப்போது” என கேட்டனர் மக்கள்.

“இறைவனின் விருப்பம் எப்போதோ அப்போது” என்றார் முல்லா.

ஒருநாள். வழக்கம்போல உணவகத்திற்கு வந்து கொண்டிருந்தார் முல்லா. எதிரே மன்னரின் காவலர் வந்துக்கொண்டிருந்தார். முல்லாவும் அந்த காவலரும் நண்பர்கள்.

தன்னுடன் வந்து சிற்றுண்டி சாப்பிடும்படி காவலரை அழைத்தார் முல்லா. அவரும் சம்மதித்து இருவரும் உணவகத்திற்கு வந்து அமர்ந்தார்கள்.

அப்போது, அந்த முரடன் வருவதை கவனித்துவிட்டார் முல்லா. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

தனது நண்பரான மன்னரின் காவலரிடம், “நண்பரே என்னுடைய தலைபாகை உங்களுக்கு அழகாக இருக்கும். அணிந்து பாருங்கள்.” என்றார் முல்லா.

காவலரும் முல்லாவின் தலைபாகையை அணிந்தார். உடனே முல்லா, ”இங்கேயே உட்கார்ந்து இருங்கள். இதோ வந்துவிடுகிறேன்.” என்ற முல்லா, அங்கிருந்து எழுந்து சென்று அந்த உணவகத்தின் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்.

முரடன் வந்தான். வழக்கமாக முல்லா அமர்ந்திருக்கும் இருக்கையில் மன்னரின் மெய்காவலர் அமர்ந்து இருப்பதை கவனிக்காமல், தலைபாகையை பார்த்து முல்லாதான் அமர்ந்து இருப்பதாக நினைத்து தலைபாகையை தட்டிவிட்டான் முரடன்.

மன்னரின் மெய்காவலருக்கு வந்ததே ஆத்திரம். தனது வாளை உருவி முரடனின் தலையை ஒரே சீவாக சீவி கொன்றார். இதை பார்த்த மக்கள் மகிழ்ந்தார்கள். பிறகு ஒன்று தெரியாததைபோல வந்த முல்லா, ”நண்பரே மன்னிக்கவும். உங்களை காத்திருக்க வைத்துவிட்டேன். வாருங்கள் கிளம்புவோம்.” என்று காவலரை அழைத்து சென்றார் முல்லா.

முரடனுடன் நேரடியாக மோதினால் ஆபத்து தனக்குதான் என்பதை உணர்ந்து, இந்த முரடனை அடியோடு அழிக்க காத்திருந்த முல்லாவின் சாமர்த்தியம் இது என்பதை மக்கள் புரிந்து, முல்லாவை பாராட்டி பேசினார்கள்.


ஆம். காரியம் சாதிக்க வேண்டும் என்றால் சகிப்புதன்மை வேண்டும். அந்த சகிப்பு தன்மை இருந்தால்தான் நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அமைதியும் கிடைக்கும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

Monday, October 21, 2013

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.



Welcome to Madurai Sivakumar's Website

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.



http://mdusskadl.blogspot.com// ·  விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.com//· படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com/. பொது அறிவுச்செய்திகள்

 http://maduraisskadl.blogspot.com//   சிறுகதை:

 http://www.mdusskadlsk.blogspot.in/     நகைச்சுவை.காம்.

http://www.sskganesh.blogspot.in/   பார்த்ததில் பிடித்தது

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS


http://ssktamilquotes.blogspot.in/     தமிழ் பொன் மொழிகள்


https://plus.google.com/110659488613257381414/posts?hl=en&partnerid=gplp0

Friday, September 6, 2013

கழுதையும் ஓநாயும்





·         ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல்". என உறுமியது ஓநாய்.ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து,ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

Sunday, August 18, 2013

புதிய வியாபாரி


ஒருபுகைவண்டிநிலையத்தில்பிச்சைக்காரன்ஒருவன்தனதுகைப்பைநிறையபென்சில்களைவைத்துக்கொண்டுஅமர்ந்திருந்தான்.ஒருகணவான்அந்தவழியாகச்சென்றபோது5ரூபாய்நாணயத்தைபிச்சைக்காரனின்திருவோட்டில்போட்டார்.பிறகுபுகைவண்டியில்ஏறிஅமர்ந்தார்.  

அவரதுமனதில்ஒருகருத்துஉதித்தது.எழுந்துவேகவேகமாகஅதேபிச்சைக்காரனிடம்சென்று,"அவனதுபையிலிருந்தபென்சில்களைஎடுத்துக்கொண்டு5ரூபாய்க்குச்சமமானபென்சில்களைஎடுத்துக்கொள்கிறேன்.என்னஇருந்தாலும்நீயும்தொழில்செய்கிறாய்அல்லவா?",என்றுகூறிவிட்டுபுகைவண்டியில்தனதுஇருக்கைக்குத்திரும்பினார்.
 ஆறுமாதங்களுக்குப்பிறகுஅந்தகணவான்ஒருவிருந்தில்கலந்துகொள்ளச்சென்றார்.அந்தவிருந்தில்6மாதங்களுக்குமுன்னாலேஇரயில்நிலையத்தில்பிச்சையெடுத்துக்கொண்டுஇருந்தவனும்அமர்க்களமானகோட்மற்றும்டைசகிதமானஉடையில்கனகச்சிதமானகணவானாகவிருந்தில்பங்குகொள்ளவந்துஇருந்தான்.அவன்இந்தக்கணவானைஅடையாளம்கண்டுகொண்டுஇப்படிக்கூறினான்.

அன்பரே..நீங்கள்என்னைமறந்துபோகியிருக்கலாம்.ஆனால்நான்உங்களால்தான்இப்படிநல்லநிலைமைக்குவந்துஇருக்கிறேன்.நான்நல்லநிலைமைக்குவருவதற்குநீங்கதான்காரணம்."அந்தகோட்சூட்வாலிபன்கணவானிடம்பழையநிகழ்வுகளைநினைவூட்டினான்.

கணவான்,"எனக்குநினைவுவந்துவிட்டது.இப்போதுஎன்னசெய்கிறாய்.உடைகளிலும்நல்லமாற்றம்தென்படுகிறது,என்னப்பா?".என்றுகேட்டார்

கோட்சூட்வாலிபன்சொன்னான்,"நீங்கள்தான்என்னுடையமாற்றத்துக்கும்வளர்ச்சிக்கும்காரணம்.என்னுடையவாழ்நாளிலேஉங்களைமறக்கமுடியாது.என்வாழ்க்கையில்என்னைஒருமனிதனாகமதித்தமுதல்மனிதர்நீங்கள்தான்.5ரூபாயைஎனதுதிருவோட்டில்இட்டபின்சிறிதுநேரத்த்திற்குப்பிறகுவந்துஅந்தரூபாய்க்குச்சமமானபென்சில்களைஎன்னிடமிருந்துபெற்றுச்சென்றீர்கள்".

"எனக்குள்ஒழிந்திருந்தவியாபாரிஅப்போதுதான்எனக்கேதெரியவந்தான்.அதுவரையில்பிச்சையெடுத்துத்திரிந்தநான்அந்தஒருநிமிடத்தின்தாக்குதலில்ஒருவியாபாரியாகஉருவெடுத்துஉழைக்கஆரம்பித்தேன்".

"அந்தஒருநிமிடத்துக்குமுன்னர்வரையில்சோம்பேறியாகஅழுக்காகபுகைவண்டிநிலையத்தின்பிச்சைக்காரர்களின்வரிசையில்ஒருவனாகயாராலும்மதிக்கப்படாத,உருப்படாதவனாகஇருந்தநான்உங்கள்நடவடிக்கையால்திருந்தினேன்.

என்னுள்ளேசாக்ரடீஸின்கொள்கைகளைத்தூண்டிவிட்டவர்நீங்கள்தான்.பிறகுதான்சிந்திக்கஆரம்பித்தேன்."நான்யார்?எனதுகொள்கைஎன்ன?

எதற்காகவோபிறந்துவிட்டேன்.ஆனால்சாகும்போதாவதுஎதையாவதுசாதித்துவிட்டுசாகலாமே.எனமுடிவெடுத்தேன்.பிச்சையெடுப்பதைநிறுத்திஎனதுபுதியவாழ்க்கையைஆரம்பித்தேன்.நான்உங்களுக்குநன்றிகூறுவதற்குஎன்றென்றும்கடமைப்பட்டுள்ளேன்.நன்றிகள்பலகோடிஅய்யா",என்றான்.



அனைவருக்குள்ளும்ஏதாவதுஒருதிறமைஒளிந்திருக்கும்.அதைசரியானநேரத்தில்பயன்பயன்படுத்தினால்வாழ்கையில்முன்னேறலாம்! 

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...