Total Pageviews

Thursday, December 29, 2011

பழைய எண்



பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய மொபைல் நம்பரை இன்னமும் மாற்றாமல் உபயோகித்துக்கொண்டிருந்தான் தனசேகரன்.புது ஸ்கீம், குறைந்த கால்சார்ஜ், நிறைய வசதியென்று எத்தனையோ சலுகைகள் பிற கம்பெனிகள் அறிவித்தபிறகும் தனசேகரன் மட்டும் மாறவே இல்லை.அலுவலகத்தில் அவனுடன் பணிபுரியும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானாலும் அதெற்க்கெல்லாம் புன்னகை ஒன்றை மட்டுமேபதிலாகத் தந்துவிட்டு நகர்ந்துவிடுவான்
 
``
 
``என்ன சார் நீங்க, இன்னும் அந்த பழைய எண்ணையே வெச்சிருக்கீங்க, அத மாத்துறதுக்கு உங்களுக்கு மனசே வராதா? அப்படியென்ன அந்த எண் மேல ஒரு பிரியம்?'' அலுவலகத்தில் அவனுடன் வேலை பார்க்கும் சந்திரன் கேட்டதுதான் தாமதம் தனசேகரனுக்கு கண்கள் நிறைந்தது.இந்த மொபைல் நம்பர் ஏழாவது படிச்சுகிட்டு இருந்த என் மகன் தான் செலக்ட் பண்ணி வாங்கினான், அவனுக்கு இந்த நம்பர் அத்துப்படி, ராத்திரி தூக்கத்துல கேட்டாலும் சொல்வான், ஒரு நாள் அவன் காணாம போயிட்டான், இன்னமும் திரும்ப வரல, என்னைக்காவது ஒருநாள் இந்த நம்பர்ல போன் பண்ணுவான்ங்கற நம்பிக்கையுலதான் இந்த நம்பர மாத்தாம வெச்சிருக்கேன்!'' கண்கள் கலங்க தனசேகரன் சொல்லி முடித்தபோது அவனோடு சேர்ந்து அழவேண்டும் போலிருந்தது சந்திரனுக்கு.
 
 

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...