Total Pageviews

Tuesday, December 20, 2011

ஞாயிற்றுக்கிழமை

"வர்ற ஆவணி மாதம் பத்தாம் தேதி புதன்கிழமை நாள் நல்லாயிருக்கு, அன்ணைக்கு கல்யாணத்த வெச்சுக்கோங்க ரொம்ப சிறப்பா இருக்கும்" தனது மகளின் திருமண தினத்தை புரோகிதர் பஞ்சாங்கம் பார்த்து சொன்னபோது தேவராஜ்க்கு அது பிடிக்காமல் போனது.

 "புரோகிதரே அதே மாசத்துல ஞாயிற்றுக்கிழமை நாள் குறிச்சு குடுத்திடுங்க" என்றார் தேவராஜ். "ஞாயிற்றுக்கிழமை நாள் நல்லா இல்ல சார்" புரோகிதர் அங்கலாப்புடனே சொன்னார்.

 "பரவாயில்ல அந்த நாளே இருக்கட்டும்" என்றபோது புரோகிதர் மறுபேச்சின்றி அந்த நாளையே குறித்து கொடுத்தார். " அப்பா சிற்றியிலெயெ பெரிய மண்டபத்த புக் பண்ணிடவா" என்று கேட்ட தனது மகனிடம் " நம்ம ஊருல இருக்கிற சாதாரண மண்டபமே போதும்" என்றார். 

 "என்னப்பா நீங்க நல்ல நாள், நல்ல மண்டபம் எதுவும் வேண்டாங்கறீங்க ஏன்? என்ற தனது சந்தேகத்தை மெல்ல கேட்டான் அவரது மகன். 

"கல்யாண நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமையா இருந்தா பள்ளிகூடம் போறவங்க, வேலைக்கு போறவங்க எல்லாரும் கல்யாணத்துக்கு வந்து வயிறார சாப்பிட்டுட்டு வாழ்த்தியிட்டு போவாங்க, ஐந்து கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற சிற்றியில மண்டபம் புக் பண்ணினா பஸ் ஏறி வர்றதுக்கு சிரமப்பட்டு பாதி பேர் வராம போயிடுவாங்க" என்றபோது தனது தந்தை ஒரு பாசக்காரர் என்பதை புரிந்து கொண்டான் அவரது மகன். 

நன்றி :பாக்யா

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...