நடைபாதை. ஓர் இளைஞன். கையில் பாட்டில்.
“”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!”
என்று கூவி விற்றான். நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்… சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான். “”அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?” “”சிறையிலே இருந்தேன்!” ”ஏன்?” ”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!” “”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!”
“”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.”
”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?” உங்க நம்பிக்கை!நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி!”நம்பிக்கையோடு நடைபோடக் கற்றுக் கொண்டால் தோல்வியைக் கண்டு துவண்டு போகவேண்டிய சூழ்நிலை ஏற்படாது ` ` |
Total Pageviews
Thursday, November 24, 2011
நம்பிக்கைதான் வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் உனக்கு சொர்க்கமாகும் !
குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...
-
நவம்பர் 16 சர்வதேச சகிப்புத் தன்மை தினம். உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வேண்டும் உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வ...
-
ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொரு...
-
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு செல்வந்தர் தனது வீட்டு பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த...
No comments:
Post a Comment